search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகை"

    • வன அதிகாரி இளையராஜா தகவல்
    • கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 3 கட்ட மாக பறவைகள் கணக் கெடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்திலும் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 வன ஊழியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தேரூர் சுசீந்திரம், வேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

    கணக்கெடுப்பில் கூழக்கடா, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான், பச்சைக்காளி உள்ளான், பவளக்காளி உள்ளான், பூநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கண்டறியப்பட்டது .இதனை வனத்துறை ஊழியர்கள் குறிப்பெடுத்துக் கொண்ட னர். கணக்கெடுப்பு பணியினை புத்தளம் மற்றும் தேரூர் பகுதியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை பறவைகள் வரத்து அதிகமாக காணப்படும்.புத்தளம், சாமிதோப்பு, தேரூர், வேம்பனூர், ராஜாக்கமங்கலம், புத்தளம் பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. பறவை ஆர்வலர்கள், வன அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புத்தளம் பகுதியில் வழக்கத்தை விட குறைவான பறவைகள் தென்பட்டது. அங்கு பூநாரை பறவைகள் அதிக அளவு உள்ளது. சுசீந்திரம் பகுதியில் கூலகடா மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் தென்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து பறவைகள் தற்போது இடம்பெற தொடங்கி உள்ளன. ராமேசுவரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளன. தற்போது நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்த கட்டமாக மார்ச் மாதம் வனப் பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×