search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடகம்பள்ளி சுரேந்திரன்"

    தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #KadakampallySurendran #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

    இதைப்போல சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.



    இதற்கு தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக கூறினார். சசிகலா (வயது 47) என்ற இலங்கைப்பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மந்திரியின் இந்த தகவலால் சபரிமலையில் தரிசனம் செய்த தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. #KadakampallySurendran #Sabarimala

    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #SabarimalaVerdict
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததும் அதை வரவேற்பதாக கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கூறியது.

    கோர்ட்டு தீர்ப்பை ஏற்று பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாக தெரிவித்தன. நாளை மறுநாள் (புதன் கிழமை) இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வருகிற 18-ந்தேதி முதல் பெண்களை அனுமதிப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் தனது முடிவை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிரம் காட்டியது. தற்போது அரசு அதிகாரிகள் அதில் வேகத்தை குறைத்து பல்டி அடித்துள்ளனர்.

    பெண்களை சபரி மலைக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று பந்தள ராஜ குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்ட்டை ராஜ குடும்பத்தினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து மறு சீராய்வு மனு செய்ய தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மறுசீராய்வு மனுவை ஆதரித்து கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-


    சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை தேவசம்போர்டு மீது திணிக்கப் போவதில்லை.

    இவ்வாறு மந்திரி சுரேந்திரன் கூறியுள்ளார்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு கேரள மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ‘‘தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

    இதன் மூலம் கேரள மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிக்கல்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.

    இதற்கிடையே சபரி மலைக்கு குடும்ப பெண்கள், உண்மையான பெண் பக்தர்கள் வர மாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வந்து செல்வார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

    அவரது பேச்சு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #Sabarimala #SabarimalaTemple #SabarimalaVerdict
    சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும் என்று கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #KadakampallySurendran
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு. அதைத்தான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசின் முடிவு நியாயப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சபரிமலையில் மட்டுமின்றி ஆராதனை கோவில்கள் எதுவானாலும், பெண்களை தனிமைப்படுத்துவது அவர்களை அவமதிப்பதற்கு சமமானது. சாதி, மத, பேதம் இன்றி அனைத்து மக்களும் தரிசிக்கும் சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மூலம் நியாயம் கிடைத்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டியதும், அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு ஆகும். இதுகுறித்து தேவஸ்தானம் போர்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி தீர்மானிக்கப்படும்.

    கால மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சியை ஏற்று கொள்ளும் மக்கள், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KadakampallySurendran
    ×