என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓ. பன்னீர்செல்வம்"
- போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
- தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அவருக்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பதால் கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
சட்டரீதியிலான அனைத்து போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வி அடைந்த அவர் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் அவர் கோவையில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி நடத்தினார்.
முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார். இந்த நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த அவரது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் மேலும் பின்னடைவை சந்தித்தார்.
என்றாலும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பதற்கு தனது சுற்றுப்பயணம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
அந்த வகையில் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளார். திண்டுக்கல்லில் இருந்து அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
தென் மாவட்டங்கள் மற்றும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிறைவு செய்ய உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஆதரவாளர் மேலும் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சற்று பின்னடைவுதான். என்றாலும் மூல வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
- திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.
பெரியகுளம்:
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை யார்? என்பதை தீர்மானிக்க கடும் போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க தொண்டர்களை சந்திக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதனையடுத்து திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
அந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனர்களை அகற்ற வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பேனர்களை அகற்றாவிட்டால் நாங்களே கிழித்து எரிந்துவிடுவோம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே தாங்கள் வைத்த பேனர்களை அகற்றினர். இச்சம்பவத்தால் பெரியகுளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்