என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது கட்ட சுற்றுப்பயணம் 28-ந்தேதி தொடக்கம்
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அவருக்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பதால் கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
சட்டரீதியிலான அனைத்து போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வி அடைந்த அவர் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி சமீபத்தில் அவர் கோவையில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி நடத்தினார்.
முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார். இந்த நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த அவரது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் மேலும் பின்னடைவை சந்தித்தார்.
என்றாலும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பதற்கு தனது சுற்றுப்பயணம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
அந்த வகையில் தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளார். திண்டுக்கல்லில் இருந்து அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
தென் மாவட்டங்கள் மற்றும் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்து நிறைவு செய்ய உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஆதரவாளர் மேலும் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சற்று பின்னடைவுதான். என்றாலும் மூல வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்