search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றுமை யாத்திரை"

    • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள்.
    • இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்தது.

    கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்று அம்பாலா மாவட்டத்தில் நிறைவடைந்தது.

    இதையடுத்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக பஞ்சாப் சென்ற ராகுல் காந்தி நேற்று அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.

    பின்னர் நேற்று மாலை சிர்ஹிந்த்துக்கு சென்று அங்கு இரவு தங்கினார். இன்று காலை சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா பதேகர் சாகிப்புக்கு ராகுல்காந்தி சென்று வழிபட்டார். அப்போது அவர் தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமிர்ந்தர்சிங் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்கள் என பலரிடம் பேசினேன். இதன் மூலம் இந்த யாத்திரையில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

    பா.ஜ.க, நாட்டில் பயத்தையும், வெறுப்பையும் பரப்புகிறது. ஆனால் இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது. இதனால்தான் இந்தியா ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றது.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். ஒரு மதத்தை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு சாதியை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு மொழியை இன்னொருவருக்கு எதிராகவும் வைத்து நாட்டின் சூழலை கெடுத்துவிட்டார்கள்.

    எனவே அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் கொண்ட மற்றொரு பாதையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகவே இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

    இந்த யாத்திரை பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது அது சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப்பில் இன்று ராகுல்காந்தி தனது யாத்திரையை சிர்ஹிந்தில் இருந்து தொடங்கினார். பஞ்சாப்பில் தினமும் 25 கி.மீ. தூரத்தை கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 19ம் தேதி பதன்கோட்டில் யாத்திரை முடிவடைகிறது. பின்னர் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழைகிறது.

    • உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
    • காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

    இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம் ராகுல் நடந்துள்ளார்.

    தற்போது வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான குளிர் நிலவுவதால் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக 9 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி மீண்டும் ராகுல்காந்தி ஒன்றுமை யாத்திரையை தொடங்க உள்ளார்.

    உத்தரபிரதேசம் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் அவர் காஷ்மீரில் ஜனவரி 26-ந்தேதி பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். காஷ்மீரில் ராகுல் பாதயாத்திரை நுழையும் போது உரிய ராணுவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட போது அந்ததந்த மாநில கட்சி தலைவர்களை யாத்திரைக்கு காங்கிரசார் அழைத்தனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் போது ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஆனால் ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேத்தில் 2 பெரிய கட்சி தலைவர்கள் ராகுல்யாத்திரையை புறக்கணிப்பது காங்கிசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கொரோனா மீண்டும் பரவுவதால் பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியது.
    • இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பா.ஜ.க.வினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம் என கடுமையாக தாக்கிப் பேசினார்.

    இதேபோல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார்.

    இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துகிறது. அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என தெரிவித்தார்.

    ×