search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒற்றுமை யாத்திரை செல்லும் இடங்களில் மட்டும் கொரோனா உள்ளது - ராகுல் காந்தி தாக்கு
    X

    ராகுல் காந்தி

    ஒற்றுமை யாத்திரை செல்லும் இடங்களில் மட்டும் கொரோனா உள்ளது - ராகுல் காந்தி தாக்கு

    • கொரோனா மீண்டும் பரவுவதால் பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியது.
    • இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பா.ஜ.க.வினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம் என கடுமையாக தாக்கிப் பேசினார்.

    இதேபோல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார்.

    இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துகிறது. அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என தெரிவித்தார்.

    Next Story
    ×