search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த சேவை மையம்"

    • தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.

    திருப்பூர்:

    உடுமலை தாலுகாவில் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர், காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் பதவிக்கு முதுகலை பட்டதாரி சமூக பணிகள்சட்டம் படித்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35,36, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதில் களப்பணியாளா் பணியிடத்துக்கு முதுகலை சமூக பணிகள் முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசு அல்லது அரசு சாரா திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்பான களப்பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும். மூன்று வேளையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

    காவலா் பணிக்கு காவலா் அல்லது இரவுக்காவலராகப் பணிபுரிந்த அனுபவம் இருப்பதுடன், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த நபா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் வருகிற 25 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604. ேமலும் விவரங்களுக்கு 0421-2971168, 91500-57947 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×