search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம். 

    ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

    • தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.

    திருப்பூர்:

    உடுமலை தாலுகாவில் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர், காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் பதவிக்கு முதுகலை பட்டதாரி சமூக பணிகள்சட்டம் படித்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35,36, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×