search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா. பொதுச்சபை"

    • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
    • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

    95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

    ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

    இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

    மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு ருசிரா கூறினார்.


    • 1948ல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றது
    • உலக நாடுகளில் சிக்கல்கள் நிலவும் சூழலில் மனித உரிமைக்கான அவசியம் வலுப்பெறுகிறது

    உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 10, "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

    1914லிருந்து 1918 வரையில் முதலாம் உலக போரையும், 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலக போரையும் உலகம் சந்தித்தது. இதையடுத்து இதே போன்ற நிலை மீண்டும் தோன்றுவதை தடுக்கும் விதமாக உலக நாடுகள் ஒன்றுபட்டு பல முடிவுகளை எடுத்தன.

    அதன் ஒரு தொடர்ச்சியாக 1948ல் டிசம்பர் 10 அன்று, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐ.நா. பொதுச்சபை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் ஏற்று கொண்டது.

    தொடர்ந்து 1950ல் இந்த பிரகடனம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து டிசம்பர் 10 "மனித உரிமை தினம்" என கொண்டாடப்படுகிறது.

    உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றை கோருவதற்கும், எந்த வித்தியாசங்களும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்குமான நோக்கத்துடன் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மனித உரிமை பிரகடனம் (UDHR) மக்களிடையே இனம், நிறம், மதம், பாலினம், மொழி, நாடு உள்ளிட்ட எந்த வித்தியாசமுமின்றி மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர், ரஷியா-உக்ரைன் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம், சூடான் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட உலகளாவிய பதட்டமான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கான அவசியம் மேலும் வலுவடைந்துள்ளது.

    பிரகடனப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இது குறித்து பேசிய ஐ.நா. கூட்டமைப்பின் தலைவர் வால்கர் டர்க் (Volker Turk), "உலகம் பல சிக்கல்களாலும், நெருக்கடியாலும் சூழப்பட்டிருந்தாலும் மனித உரிமைகள் தோற்கவில்லை" என கூறினார்.

    2023க்கான மனித உரிமை தின கருப்பொருள் "சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி" என்பதாகும்.

    • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
    • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

    ×