search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்ஜே சூர்யா"

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.



    • எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாலி’.
    • இப்படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது.

    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 'வாலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கதை எழுதியவற்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணத்தையும் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு தான் சொந்தமானது அதனால் இப்படத்தின் இறுதி ரீமேக் வேலையை துவங்குவதற்கு இடைக்கால அனுமதியை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்களை பதிவு செய்யும் நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர் முன்பு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.


    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார்.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.



    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.



    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில், தியேட்டரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலானது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,'பொம்மை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'இந்த காதலில்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.



    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை (ஜூன் 4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார். இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். 


    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    ஜிகர்தண்டா -2

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

    இதைத்தொடர்ந்து, ஜிகர்தண்டா படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாகவும் இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




    • இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.


    பொம்மை

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.




    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    எஸ்.ஜே.சூர்யா - ராகவா லாரன்ஸ்

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்திருந்தார். இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் ஜிகர்தண்டா- 2 படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.


    ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "36 நாட்கள் ஒரே செடியூலில் ஜிகர்தண்டா -2. இந்த வாய்ப்புக்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ் சார். ராகவா லாரன்ஸ் அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘வதந்தி’ வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.


    வதந்தி

    இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    எஸ்.ஜே. சூர்யா

    இந்நிலையில், 'வதந்தி' புரோமோஷன் பணிகளின் போது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ஆர்சி 15 படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் ஆர்சி 15 பற்றி சொல்ல எனக்கு அனுமதி இல்லை எனவும் இயக்குனர் ஷங்கர் படத்தை முடிக்கும் வரை விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆர்சி 15-ல் என் பங்கு பற்றி நான் பேசுவது கூட, தயாரிப்பாளர்கள் நான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தான் என தெரிவித்துள்ளார்.

    ×