வாலி பட வழக்கு.. எஸ்.ஜே. சூர்யா ஆஜராகி சாட்சியம்

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாலி’.இப்படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது.
வாலி பட வழக்கு.. எஸ்.ஜே. சூர்யா ஆஜராகி சாட்சியம்
Published on

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 'வாலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கதை எழுதியவற்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணத்தையும் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு தான் சொந்தமானது அதனால் இப்படத்தின் இறுதி ரீமேக் வேலையை துவங்குவதற்கு இடைக்கால அனுமதியை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்களை பதிவு செய்யும் நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர் முன்பு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com