search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி. வேலுமணி"

    • மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த தமிழக அரசு தவறியதால் அங்கீகாரம் ரத்து என குற்றச்சாட்டு
    • அரசு பூங்காவிற்கு மூடுவிழா நடத்துவது வேதனை என்று சாடல்

    கோவை,

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. பூங்கா என அழைக்கப்படும் வ.உ.சிதம்ப ரனார் பூங்காவை மேம்ப டுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளாத தால் கடந்த ஆண்டு இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இங்குள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும் கோவை மாவட்ட மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

    இந்த பூங்கா 1965-ம் ஆண்டு நான்கரை ஏக்கர் பரப்பளவில் தொடங்க ப்பட்டு ஒரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக சுற்றுலாப யணிகளை பெரிதும் கவர்ந்து வந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டது. கோவை மாநகராட்சியால் பூங்கா நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    கோவை மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதி னருக்கும் இப்பூங்கா ஒரு பொழுது போக்கு மையமாக சுமார் 60 ஆண்டுகளாக விளங்கு கிறது.

    முன்னாள் பிரதமர் அப்துல்கலாம் இப்பூங்கா வில் நட்ட மரம் பச்சைநாயகி என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க உயிரியல் பூங்காவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுரையின் படி மேம்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர தவறிய நிலையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உயிரினங்கள் இடம் மாற்றம் செய்யப்படு வது, மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டத்திற்கென எந்தவொரு திட்டத்தையும் தராமல், அ.தி.மு.க. அரசு கோவையின் வளர்ச்சிக்கு தந்து சிறப்பித்த சாதனை திட்டங்களான பாலங்கள், குடிநீர் திட்டப்பணிகள், சீர்மிகு நகர திட்டம், சாலைகள் விரிவாக்கம் மற்றும் குளங்கள் மேம்பாடு ஆகியவற்றில் சுனக்கம் காட்டி கோவை மாவட்டத்தை புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள உயிரினங்கள் இடமாற்றம் செய்து இந்த அரசு பூங்காவிற்கு மூடு விழா காண்கிறது.

    எனவே வ.உ.சி. விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்களை இடமாற்றம் செய்யப்படு வதை கோவை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்தி மீண்டும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதோடு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.

    திருப்பூர் :

    கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார். 

    ×