search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்"

    • விறப்னையை அதிகப்படுத்த பஜாஜ் திட்டம்.
    • 373சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரிபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் செட்டாக் EV-யின் புது வேரியன்ட் மற்றும் பல்சர் NS400 மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் சி.என்.ஜி. திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவில் குறிப்பிடத்தக்க மாடலாக செட்டாக் இருந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் மாதாந்திர விறப்னையை 15 ஆயிரம் யூனிட்களாக அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் செட்டாக் EV ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல் மூலம் வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் பஜாஜ் நிறுவனம் குறிப்பிடத்தக்க நிலையை அடைய உதவும் என தெரிகிறது.

    புதிய செட்டாக் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வேரியன்ட்-ஐ விட குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிசையில், பல்சர் NS400 மாடல் பல்சர் சீரிசில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருந்து வருகிறது. இதில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். டியூக் 390 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்தலாம்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டார்ப்-அப் பிரான்டு சர்ஜ் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. S32 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாகனம் புதுவித பயன்பாட்டை கொண்டிருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கரங்களை கொண்ட பயணிகள் அல்லது சரக்கு வாகனம் ஆகும்.

    சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோரை குறிவைத்து இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது போன்ற வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஹீரோ சர்ஜ் S32 மாடலை பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்த செய்கிறது.

     


    கான்செப்ட் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஹீரோ சர்ஜ் S32 மாடலை வாங்கும் போது பயனர்கள் ஒரே கட்டணத்தில் இரண்டு வாகனங்களை பெற முடியும். ஹீரோ சர்ஜ் S32 கொண்டு பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாக மாற்ற மூன்று நிமிடங்களே ஆகும்.

    சர்ஜ் S32 மாடல் தோற்றத்தில் 3 சக்கர எலெக்ட்ரிக் கார்கோ வாகனம் அல்லது ரிக்ஷா போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புற கேபினில் வின்ட்-ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. பட்டனை க்ளிக் செய்யும் போது முன்புற வின்ட்ஷீல்டு பகுதி மேலே உயர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியே வரும்.

     


    3 சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர் இடையே பேட்டரி மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முறையே 10 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. 3 சக்கர வாகனத்தில் 11 கிலோவாட் ஹவர் பேட்டரியும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனம் 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கிறது.



    • இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசர் வெளியானது.
    • இ லூனா முன்பதிவு துவங்கியுள்ளது.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த மொபெட் மாடல் லூனா. இதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த கைனடிக் கிரீன் நிறுவனம் இந்திய சந்தையில் லூனா மாடலை மீண்டும் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    மேலும் புதிய இ-லூனா ஸ்கூட்டருக்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. டீசர் மட்டுமின்றி இ லூனா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 500 ஆகும். வெளியீடு பிப்ரவரி மாத வாக்கில் நடைபெறும் என தெரிகிறது.

     


    இ லூனா மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை தழுவியே இருக்கும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஸ்ப்லிட் ரக சீட் வழங்கப்படுகிறது. புதிய இ லூனா மாடலில் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

    இதில் வழங்கப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    • புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தியது.
    • புது அப்டேட் மூலம் நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஒலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) முறையில் மூவ் ஒ.எஸ். 4 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இது வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை அடியோடு மாற்றும் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    புதிய மூவ் ஒ.எஸ். 4 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஒலா S1 ஜென் 1, மேம்பட்ட S1 ப்ரோ மற்றும் S1 ஏர் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலா S1 X பிளஸ் மாடல்களுக்கு வரும் மாதங்களில் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த அப்டேட் மூலம் நேவிகேஷன் வசதி இதற்கு முன்பு இருந்ததை விட அதிவேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒ.எஸ்.-இன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இகோ மோடில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய அப்டேட் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் உள்ள "கேர்" மோட் பயனர்களுக்கு காற்று மாசு அளவு குறித்த தகவல்கள் மற்றும் சேமிப்பு குறித்த விவரங்களை வழங்குகிறது.

    • நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
    • சிறப்பு சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜனவரி 15-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஓலா S1 X பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மற்றும் ஓலா S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ரூ. 6 ஆயிரத்து 999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

     


    இவைதவிர தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் வாகனம் வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, 7.99 சதவீத வட்டி போன்ற நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 X - S1 X (பேஸ்), S1 X (3 கிலோவாட் ஹவர்) மற்றும் S1 X பிளஸ் - S1 ஏர் மற்றும் S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    ஓலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்றும் S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
    • இதன் வழியே ஆரஞ்சு நிற ஃபிரேம் காணப்படுகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஏத்தர் 450 அபெக்ஸ் என பெயரிடப்பட்டு இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், பக்கவாட்டில் கண்ணாடி போன்ற பாடி பேனல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் வழியே ஆரஞ்சு நிற ஃபிரேம் காணப்படுகிறது. இதன் இடதுபுறம் பெல்ட் டிரைவ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 450 அபெக்ஸ் மாடலில் 7 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது 450 அபெக்ஸ் மாடல் 10 கிலோமீட்டர் வரை வேகமாக செல்கிறது. மேலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தையும் இந்த ஸ்கூட்டர் 2.9 நொடிகளில் எட்டிவிடுகிறது. ஏத்தர் 450X மாடல் இதற்கு 3.3 நொடிகளை எடுத்துக் கொள்கிறது.

    புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல்- ஸ்மார்ட் இகோ, இகோ, ரைடு, ஸ்போர்ட், வார்ப் மற்றும் வார்ப் பிளஸ் என ஆறுவித ரைடு மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டேஷ்போர்டு ஆட்டோ பிரைட்னஸ் வசதி, பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இதுதவிர ஹில் ஹோல்டு, ஆட்டோ இன்டிகேட்டர் கட் ஆஃப், கோஸ்டிங் ரீஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் மேஜிக் டுவிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ரீஜெனவேரடிவ் பிரேக்கிங் சிஸ்டத்தின் அதிநவீன வெர்ஷன் தான் மேஜிக் டுவிஸ்ட் என ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 200 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் 12 இன்ச் வீல்கள் உள்ளன. ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலில் 22 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 111.6 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டர் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் பேட்டரி வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    • மணிக்கு அதிகபட்சம் 73 கிமீ வேகத்தில் செல்லும்.
    • இதில் 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் 2024 செட்டாக் பிரீமியம் மற்றும் அர்பேன் வேரியண்ட்களை அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 001 மற்றும் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 463 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் டெக்பேக் பெயரில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இதனை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகின்றன. புதிய ஸ்கூட்டர்களில் பிரீமியம் வேரியண்ட் 5-இன்ச் அளவில் டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இத்துடன் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 73 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 127 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது செட்டாக் ஸ்கூட்டரின் முந்தைய வேரியண்ட் வழங்கியதை விட அதிகம் ஆகும்.

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி புதிய ஸ்கூட்டருடன் 800 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பிரீமியம் வேரியண்டை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15.6 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இதுதவிர செட்டாக் மாடலின் பூட் ஸ்பேஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஏத்தர் 450X மாடலில் இருக்கும் ரேபிட் வார்ப் மோட்-ஐ விட வேகமானது.
    • ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஏத்தர் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஏத்தர் உருவாக்கியதிலேயே அதிவேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் புதிய வார்ப் பிளஸ் மோட் உள்ளது. ஏத்தர் 450X மாடலில் இருக்கும் ரேபிட் வார்ப் மோட்-ஐ விட வேகமானது ஆகும்.

    புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த மாடல் ஜனவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடல் தோற்றத்தில் ஏத்தர் 450S மற்றும் ஏத்தர் 450X மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் இருக்கும் ஒரே மாற்றம் பின்புற பாடிவொர்க்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக 2020 ஆண்டு சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடலில் இருந்ததை போன்ற டிரான்ஸ்பேரன்ட் பாடி பேனல்கள் புதிய மாடலிலும் வழங்கப்படுகின்றன.

    ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலின் விலை ஏத்தர் 450X மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் பேட்டரி பேக் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

    • இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    • இரண்டு வேரியண்ட்களை வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

    பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது. இந்த மாடல் பஜாஜ் செட்டாக் பிரீமியம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பஜாஜ் செட்டாக் பிரீமியம் ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    தற்போது செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரீமியம் வேரியண்ட் அப்டேட் செய்யப்படும் நிலையில், இரண்டு வேரியண்ட்களையும் வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

     


    புதிய செட்டாக் பிரீமியம் வேரியண்ட் அறிமுகம் பற்றிய தகவலை பஜாஜ் நிறுவனம் தனது சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் பாகங்கள் பற்றிய டீசர்களும் வெளியிடப்பட்டன. டிஸ்ப்ளேவின் படி இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் ரைடிங் மோட்களும் வழங்கப்படுகிறது.

    டீசர்களின் படி புதிய வேரியண்ட் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இதில் ஒற்றை பக்க முன்புற சஸ்பென்ஷன், ஸ்மார்ட் அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய வட்ட வடிவம் கொண்ட டிசைன் வழங்கப்படுகிறது. சீட், லைட்கள், ஃபுளோர்போர்டு மற்றும் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    • முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
    • அதிகபட்சம் 105 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சிம்பில் எனர்ஜி இந்திய சந்தையில் சிம்பில் ஒன் மாடலை கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பில் டாட் ஒன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இதில் 8.5 கிலோவாட் பீக் / 4.5 கிலோவாட் பவர் மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்ட பி.எம்.எஸ்.எம். மோட்டார் உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 40 கிலமீட்டர்கள் வேத்தை 2.77 நொடிகளில் எட்டிவிடும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    புதிய சிம்பில் டாட் ஒன் மாடலில் 5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் 1024x600 பிக்சல் டச் ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய இன்டர்ஃபேஸ், 4ஜி, ப்ளூடூத் 5.2 வசதிகள் உள்ளன.

    இதன் மூலம் ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே அழைப்புகளை பேசவும், இசையை கேட்கவும் முடியும். இதில் சி.பி.எஸ்., டிஸ்க் பிரேக்குகள், 35 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ், IP67 சான்று பெற்றிருக்கிறது. சிம்பில் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நம்ம ரெட், பிரேசென் பிளாக், கிரேஸ் வைட் மற்றும் அஸ்யூர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

     


    இந்திய சந்தையில் புதிய சிம்பில் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிம்பில் ஒன் மாடலில் இருந்து சிம்பில் டாட் ஒன் மாடலுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சிம்பில் எனர்ஜி அறிவித்துள்ளது. 

    • மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம்.
    • வழக்கமான ஸ்கூட்டர்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பிரான்டுகள் வரை தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கி வருகின்றன. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் இருசக்கர வாகனங்களில் மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.

    அந்த வகையில், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணியில் உள்ள டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் வழக்கமான ஸ்கூட்டர் மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

     

    இந்த ஸ்கூட்டரில் அகலமான டெயில் லைட், ஸ்விங்-ஆர்ம்-இல் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார், இடதுபுறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டர் மட்டுமின்றி டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலெக்டிரிக் மோட்டார்சைக்கிளையும் டெஸ்டிங் செய்து வருகிறது.

    ஏற்கனவே சிம்பில் எனர்ஜி, டி.வி.எஸ்., பஜாஜ், ஒலா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்டிங் செய்து வருகின்றன. இவைதவிர ஹோண்டா நிறுவனமும் இந்த பிரிவில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், டார்க் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
    • சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டிற்குள் 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த முதல் எலெக்ட்ரிக் இருசக்கர நிறுவனமாக உருவெடுத்தது.

    இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் 1 லட்சத்து 09 ஆயிரத்து 395 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.

     


    இந்த ஆண்டு ஜனவரியில் 18 ஆயிரத்து 353 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 434 யூனிட்களை ஓலா எலெக்ட்ரிக் விற்பனை செய்தது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 898 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் 12 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் சந்தை மதிப்பு 30.50 சதவீதமாக இருக்கிறது.

    ஓலா தவிர்த்து டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 399 யூனிட்களையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 490 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே 19.60 மற்றும் 12.30 ஆக உள்ளது. 

    ×