search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருது விடும் விழா"

    • அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
    • கலெக்டர் அறிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில், எருதுவிடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அனுமதி அளிக்கபட்ட கிராமங்களில் மட்டுமே எருதுவிடும் விழாக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் ஒரு சில கிராமங்களில் கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் மாடு விடும் விழா நடத்தப்படும் என சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தெரியவருகின்றது.

    இது நெறிமுறைகளை மீறிய செயலாகும். கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு எருதுவிடும் விழா நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விழாவினை தடைசெய்வதுடன், இனி வருங்காலங்களில் அந்த கிராமத்தின் பெயரை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப இயலாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து எருதுவிடும் விழாவினை விழாக்குழுவினர்கள் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் பூசாரியூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    முன்னதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர் எருது விடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் போட்டியில் பங்கேற்றன. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசிகர்கள் பங்கேற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்த ஓடின. இதில் காளைகள் முட்டி 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்க ளுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எருது விடும் திருவிழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே. ஆர். சூர்யா குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் இவ்விழாவில் வாணியம்பாடி டிஎஸ்பி கள் விஜயகுமார் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நிலவழகன் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணி

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி, சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இதில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தனர். வாடிவாசலில் இருந்து காலை 10 மணி முதல் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் வழிமறித்து நின்று இருந்ததால் பல காளைகள் வழி தெரியாமல் ஓடுப்பாதையில் இருந்த இளைஞர்களை தூக்கி வீசி சென்றனர்.

    இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனையடுத்து பகல் 2 மணிக்கு காைள விடும் விழா முடிவடைந்தது. முதல் பரிசாக ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணகரன், அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாட்டறம்பள்ளி ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • விதிமுறைகள் குறித்து விழா குழுவினருக்கு அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா நடைபெறுவதற்கு மந்தைக்கு கால் நடுவதற்கு வட்டாட்சியர் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி எருது விடும் காளை செல்லும் காளைகள் ஓடும் பாதையில் மந்தைகள் கட்டுவதற்காக பூஜைகள் போடப்பட்டது.

    அதிகாரி ஆய்வு

    இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு மேற்கொண்டு காளை விடுவதற்கான விதிமுறைகளை விழா நடத்தும் குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காளைகளை ஒரே ஒரு முறை மட்டும் தான் விடவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர் காளை உரிமையாளர்கள் காளை விடும் இடத்தை ஆய்வு மேற்கொண்டு முன் அனுமதி சீட்டு பெற்று வருகின்றனர்.

    ஆய்வின்போது வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பத்தில் எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 45,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 31000 ரூபாய் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த எருது விடும் விழாவில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினர் முன்னதாக உறுதி மொழி ஏற்றனர்.

    அதன் பிறகு வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை கால் நடை மருத்துவர்கள் பரிசோதனை பிறகு எருது விடும் விழாவில் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.

    இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 5000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாடு முட்டியதில் சுமார் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில் 2 பேர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 200 மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
    • போலீசார் பாதுகாப்பு பணி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் இன்று காலை எருது விடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் வாணியம்பாடி சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி டிஎஸ்பி சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு இடங்களில் இருந்து 200 மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்படடன. எருது விடும் விழாவில் உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் ப.முத்தம்பட்டி ஊராட்சியில் கடந்த வாரம் எருது விடும் திருவிழா நடைபெற்ற போது அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    கண்காணிப்பு கேமரா பொருத்தம்

    அதன்படி எருது விடும் திருவிழாவில் எருதுகள் போட்டியில் பங்கேற்க பணம் வசூலிக்கப்பட்டது. எருது விடும் திருவிழா நடத்தி வசூலான தொகையில் ரூ.1 லட்சம் செலவில் ப.முத்தம்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது என ஊர் பொதுமக்கள் தீர்மானிக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா ஊராட்சி எல்லை ஆரம்பம், மற்றும் எல்லை முடிவு ஊர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 8, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி முருகன் கோயிலில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஊராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா (மூன்றாவது கண்) ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுதால் இந்த பகுதியில் குற்றம் குறையும்,, முன்பு குற்றங்களை யார் செய்தார்கள் என தெரியும் நவீன காலத்தில் யார் குற்றம் செய்வார்கள் என தெரியவில்லை கல்லூரி மாணவன் பணத்திற்காக செயின் அறுப்பதும் போன்ற குற்ற செயல்கள் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீசாருக்கு உதவியது கண்காணிப்பு கேமரா அவர்கள் ஆரம்பம் முதல் சென்றது வரை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி செல்போன் எண் மூலம் குற்றங்களை கண்டுபிடிக்க உதவியது.

    இதேபோல அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றம் மற்றும் விபத்தில் மாவட்டம் உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் அகிலன்,, உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள்.

    பின்ன செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    முத்தம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுகோளை ஏற்று ஊர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட செயல் பாராட்டுக்குரியது. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் பங்களிப்போடு தொடர்ந்து செய்து வருகிறோம்.

    இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் வைபை மூலம் இணைக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் திருட்டு மற்றும் விபத்துகள் நடைபெற்றால் உடனடியாக அங்கிருந்து கண்காணிக்க முடியும் என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.
    • எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜவுளி மாநகரில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவினையொட்டி எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக எருதுவிடும் திருவிழா நடத்துவது வழக்கம்,

    கடந்த இரண்டு ஆண்டு பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பெரும் தொற்றுநோயின் பரவல் காரணமாக தடைப்பெற்று இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் உற்சாகமாக பர்கூர் ஜவுளி மாநகரில் மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது, இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, தர்மபுரி, ஓசூர், கந்திலி, கிருஷ்ணகரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.

    எருதுவிடும் விழாவில் கலந்துக் கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு எருதுவிடும் விழா விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து ஓடிய எருதுகளை மாடுபிடி வீரர்கள் விரட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

    இதில் குறிப்பிட்ட தூரத்தினை குறைந்த மணித்துளிகளில் கடந்த எருதுகளுக்கு விழாக்குழுவினர்கள் சார்பில் முதல் பரிசாக ரூ. 2, லட்சத்து 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் பரிசு என மொத்தம் 100 பரிசுகள் இந்த விழாவில் வாரி வழங்கப்பட்டது.

    மேலும் இந்த விழாவின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்தி வழக்கறிஞர் அசோகன், ஊத்தங்கரை முன்னால் முன்னால் சேர்மன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அறிஞர்,ஆடிட்டர் வடிவேல், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, வார்டு உறுப்பினர், திருமதி மருதாமணி வடிவேல், துணைத்தலைவர் விவேகானந்தன், பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், துணைத்தலைவர் வசந்த், வார்டு உறுப்பினர்கள் ஆகாஸ், கார்த்திகேயன், எருதுவிடும் விழா கமிட்டித் தலைவர் தங்கமணி, தனபாலன், சரவணன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

    • போக்கு காட்டியவாறு காளைகள் மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன.
    • காளைகளை விரட்டிச்சென்று அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருட்களை பறிக்க முயன்றதில் சுமார் 10 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பி. முதுகானப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.

    இந்த எருதுவிடும் விழாவினை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஆகியோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் பாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், ஆந்திரா,கர்நாடகாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் நன்கு அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன.

    காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மைதானத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டன.

    சீறிபாய்ந்த காளைகளை அடக்க ஏராளமான காளையர்களும், மாடுபிடி வீரர்களும் மல்லுக்கட்டி நின்றனர். அவர்களுக்கு போக்கு காட்டியவாறு காளைகள் மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன.

    இதனை கண்டு அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். காளைகளை விரட்டிச்சென்று அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருட்களை பறிக்க முயன்றதில் சுமார் 10 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.
    • சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ஆவலப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை காண ஏராளமானோர் குவிந்து இருந்தனர். இந்த விழாவில் காளைகள் கூட்டத்தில் புகாதவாறு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த எருது விடும் விழாவை அப்பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற இளைஞர் என்பவர் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை எதிர்பாராதவிதமாக மஞ்சு மீது பாய்ந்து முட்டி தள்ளி தூக்கியது. இதில் மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் 3 பேரை காளை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • 42 கிராமங்களுக்கு தேதி ஒதுக்கீடு
    • மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெறும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரைமாவட்டத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

    இதற்காக விழாக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். அப்படி அனு மதி பெற்ற இடங்களில் மட்டுமே விழா நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் 78 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.

    இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதல்கட்டமாக இம்மாதம் வரை 43 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக் கப்பட்டது. அதன்படி இதுவரை சுமார் 30 கிராமங்களில் விழா நடந்துள்ளது.

    இதையடுத்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த கிராமங்களுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் (பொறுப்பு), ஆர்டிஓ பூங்கொடி, கூடுதல் எஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் போது 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில விழாக்குழுவினர் தங்கள் கிராமத்துக்கு சில தேதிகளை குறிப்பிட்டு அன்று நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்மீது பரிசீலனை செய்து அவர்க ளுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    42 கிராமங்களில் மார்ச் 1 ந் தேதி முதல் ஏப்ரல் 10 ந் தேதி வரை விழாக் கள் நடத்துவதற்கு அரசாணை பெறுவத ற்கு விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக் கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒடுகத்தூர் பெரிய ஏரியூரில் எருது விடும் விழா நடந்தது
    • 8 பைக்குகள் திருட்டு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் ஊராட்சியில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதற்காக ஏற்கனவே இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    விழாவில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஏடிஎஸ்பி பாஸ்கரன், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் அங்கு முகாமிட்டிருந்தனர்.

    விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேட்டுக்குடி பாபு, நாட்டாண்மை தசரதன், கணாச்சாரியார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், ஆர்ஐ நந்தகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தாரர்கள், விழா குழுவினர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்.

    விழாவிற்கு, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, போன்ற பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டது.

    இதில் சுமார் 300 காளைகள் பங்கேற்றன. பரிசோதனைக்கு பின்னர் காளைகள் அவிழ்த்து விப்பட்டது.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.

    விழாவில், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு 35 ஆயிரம் என மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டது.

    மாடு விடும் விழாவில் வீதியில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    விழாவை கான வந்து இருந்த இளைஞர்களின் 8 இருசக்கர வாகனம் திருட்டு போய் விட்டதாக போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×