search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டையில் காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்
    X

    நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

    ஜோலார்பேட்டையில் காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்

    • எருது விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் பூசாரியூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது.

    முன்னதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர் எருது விடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    மேலும் இந்த விழாவில் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 200 காளைகள் போட்டியில் பங்கேற்றன. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசிகர்கள் பங்கேற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்த ஓடின. இதில் காளைகள் முட்டி 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்க ளுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எருது விடும் திருவிழா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே. ஆர். சூர்யா குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் இவ்விழாவில் வாணியம்பாடி டிஎஸ்பி கள் விஜயகுமார் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நிலவழகன் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×