search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருது விடும் விழா"

    • பேரண்டப்பள்ளி, சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
    • 500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா - சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தோரிப்பள்ளி ஊராட்சிக்கு சேர்ந்த கல்லுக்குறுகி கிராமத்தில் அமைந்த முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அப்பகுதி ஊர் கவுண்டர் குள்ளப்பா தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு தோரிப்பள்ளி, கல்லுக்குறுக்கி அட்ட குறுக்கி, காமன்தொட்டி, வெங்கடேசப்புரம், அத்திமுகம், பேரிகை, பேரண்டப்பள்ளி, ஓசூர், சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.

    500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் எற்பட்டது . அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பேரிகை, அத்திமுகம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.

    இந்த விழாவில் பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • எருது விடும் திருவிழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, அத்திகானூரில் 71-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை ஊர்கவுண்டர் சங்கர், ஊர் செட்டியார் ராஜேந்திரன் மற்றும் முனுசாமி செட்டியார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.

    குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ரூ.2.22 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1.77 லட்சமும், 3-ம் பரிசாக ஒரு லட்சமும் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    • எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.

    காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது.
    • பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். வேலம்பட்டியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்டது. விழா தொடங்கியதும், காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டது.

    இதில் வீரர்கள் காளைகளை விரட்டி பிடிக்க முயறன்றனர். நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டன. பல்வேறு காளைகள் பந்தய இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எருதாட்ட விழாவை காண குவிந்தனர்.

    விழாவிற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற காளையின் சொந்த காரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் கூறினார்.
    • அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது அம்மனேரி. இங்கு மண்டு மாரியம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெறுவதாக தகவல் அறிந்து கூலியம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அங்கு சென்றார். அவர் மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கூறினார்.

    அந்த நேரம் அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (39), உள்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பபிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாடுகளை வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்
    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.

    இதில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக காளைகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்
    • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறுமூரில் உள்ள ஸ்ரீ சிறுபாத்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளி திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதனையொட்டி இன்று எருது விடும் திருவிழா நடந்தது. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் எருது விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின.

    தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

    • இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது
    • 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் காவல்துறை தயார் நிலையில் இருந்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.

    சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளை களை, பார்வை யாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

    • எருது விடும் விழா நடந்தது
    • 180 காளைகள் பங்கேற்றன

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர். கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. சிந்துஜா ஜெகன், முன்னாள் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 180 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    போட்டியில் பிறகு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், 2-வது பரிசாக 77 ஆயிரத்து 777, 3-வது பரிசாக 66 ஆயிரத்து 666 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன
    • பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த லத்தேரி அருகே உள்ள சோழமூர் ராமாபுரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.

    இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.

    சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 10 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.  

    • எருது விடும் விழா நடந்தது
    • குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து இலக்கையடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு விழாவை கண்டு ரசித்தனர். மந்தையில் ஓடி சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 பேரை காளைகள் முட்டி படுகாயமடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விழாவில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஒருவர் பலியானதையடுத்து நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சாமுண்டி வட்டத்தில் கடந்த 29-ந் தேதி 9-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த எருது விடும் விழாவில் காண வந்த பொது மக்கள் மற்றும் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயமடைந்தனர்.

    மேலும் இதில் பாச்சல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவகுமார், அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், மற்றும் அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த குசேலன் மகன் விக்ரம் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

    இதனால் அங்கிருந்து மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் விக்ரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வழக்குபதிவு. இது சம்பந்தமாக அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஜோலார்பேட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு விழா குழுவினர் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×