search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்எருது விடும் விழா
    X

    கூட்டத்தில் துள்ளி குதித்து வந்த காளையை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்எருது விடும் விழா

    • ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.
    • போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது.

    மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.

    ஆனால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர்.

    இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். ஆனால் பாதுகாப்பிற்காக போலீசாரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டன. இதற்காக அந்த பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    மாடுகள் துள்ளி குதித்தபடி ஓடி வந்தன. இதில் கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள தங்களின் மாடுகளை அழைத்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. இதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்திருந்தனர். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    Next Story
    ×