என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கம் ஜி.என்.பாளையத்தில் எருது விடும் விழா
- மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஜி.என்.பாளையத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடைபெற்றது.
ஜி.என்.பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்கம் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டு ஓடியது.
இந்த நிகழ்வில் மிக வேகமாக குறிப்பிட்ட எல்லையை குறித்த நேரத்தில் கடந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
Next Story






