search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூரில் எருது விடும் விழா
    X

    காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பர்கூரில் எருது விடும் விழா

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.
    • எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜவுளி மாநகரில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவினையொட்டி எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக எருதுவிடும் திருவிழா நடத்துவது வழக்கம்,

    கடந்த இரண்டு ஆண்டு பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பெரும் தொற்றுநோயின் பரவல் காரணமாக தடைப்பெற்று இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் உற்சாகமாக பர்கூர் ஜவுளி மாநகரில் மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது, இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, தர்மபுரி, ஓசூர், கந்திலி, கிருஷ்ணகரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.

    எருதுவிடும் விழாவில் கலந்துக் கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு எருதுவிடும் விழா விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து ஓடிய எருதுகளை மாடுபிடி வீரர்கள் விரட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

    இதில் குறிப்பிட்ட தூரத்தினை குறைந்த மணித்துளிகளில் கடந்த எருதுகளுக்கு விழாக்குழுவினர்கள் சார்பில் முதல் பரிசாக ரூ. 2, லட்சத்து 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் பரிசு என மொத்தம் 100 பரிசுகள் இந்த விழாவில் வாரி வழங்கப்பட்டது.

    மேலும் இந்த விழாவின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்தி வழக்கறிஞர் அசோகன், ஊத்தங்கரை முன்னால் முன்னால் சேர்மன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அறிஞர்,ஆடிட்டர் வடிவேல், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, வார்டு உறுப்பினர், திருமதி மருதாமணி வடிவேல், துணைத்தலைவர் விவேகானந்தன், பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், துணைத்தலைவர் வசந்த், வார்டு உறுப்பினர்கள் ஆகாஸ், கார்த்திகேயன், எருதுவிடும் விழா கமிட்டித் தலைவர் தங்கமணி, தனபாலன், சரவணன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

    Next Story
    ×