search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகள் முட்டி 20 பேர் காயம்
    X

    சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.

    காளைகள் முட்டி 20 பேர் காயம்

    • ஒடுகத்தூர் பெரிய ஏரியூரில் எருது விடும் விழா நடந்தது
    • 8 பைக்குகள் திருட்டு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் ஊராட்சியில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதற்காக ஏற்கனவே இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    விழாவில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஏடிஎஸ்பி பாஸ்கரன், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் அங்கு முகாமிட்டிருந்தனர்.

    விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேட்டுக்குடி பாபு, நாட்டாண்மை தசரதன், கணாச்சாரியார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், ஆர்ஐ நந்தகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தாரர்கள், விழா குழுவினர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்.

    விழாவிற்கு, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, போன்ற பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டது.

    இதில் சுமார் 300 காளைகள் பங்கேற்றன. பரிசோதனைக்கு பின்னர் காளைகள் அவிழ்த்து விப்பட்டது.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.

    விழாவில், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு 35 ஆயிரம் என மொத்தம் 75 பரிசுகள் வழங்கப்பட்டது.

    மாடு விடும் விழாவில் வீதியில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    விழாவை கான வந்து இருந்த இளைஞர்களின் 8 இருசக்கர வாகனம் திருட்டு போய் விட்டதாக போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×