search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை தகுதிச்சுற்று"

    • ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இலங்கை அணி தரப்பில் நிசங்காவும் அசலங்காவும் அரை சதம் விளாசினர்.

    ஒருநாள் உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்ச தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக பதும் நிசங்கா - கருரத்ணே களமிறங்கினர். 7-ரன் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிசங்கா அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அசலங்காவும் அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.
    • தேஜா நிடமானுரு-எட்வர்ட்ஸ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.

    உலகக்கோப்பை தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 65 பந்தில் 104 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 29.1 ஓவரில் 170 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு தேஜா நிடமானுருவுடன் எட்வர்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது. எட்வர்ட்ஸ் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தேஜா நிடமானுரு 76 பந்தில் 111 ரன்கள் விளாசினார். இதனால் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது.

    கடைசி ஓவரில் அந்த அணிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலை ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.

    இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச, நெதர்லாந்தின் லோகன் வான் பீக் எதிர்கொண்டார். ருத்ர தாண்டவம் ஆடிய அவர், முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்சர் மூணாவது பந்தில் பவுண்டரி, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்சர், ஆறாவது பந்தில் பவுண்டரி என முப்பது ரன்கள் விளாசினார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. வான் பீக் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வான் பீக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது.
    • நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஜிம்பாப்வேயில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங்- சார்லஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்து வீச்சை சுழபமாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது.

    சார்லஸ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமர் ப்ரூக்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே கிங் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹோப் - பூரன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது. ஹோப் 47 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஷெப்பர்ட் 0 ரன்னிலும் ஹோல்டர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 65 பந்துகளில் 104 ரன்னிலும் கீமோ பால் 25 பந்துகளில் 46 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • ஜிம்பாப்வே அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ரியான் பர்ல் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி- அப்பாவி காயா களமிறங்கினர். இன்னசெண்ட் காயா 32 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜாய்லார்ட் கும்பியுடன் கேப்டன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினர்.

    ஜாய்லார்ட் கும்பி 78 ரன்கள் இருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வில்லியம்ஸ் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 2 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய ராசா 48 ரன்னில் அவுட் ஆனார். 200 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பர்ல் ருத்ரதாண்டவம் ஆடினார். இவர் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் அபிஷேக் பரத்கர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்கள் எடுத்து தோற்றது.

    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் ஹராரேவில் இன்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்னில் வெளியேறினர். ரியான் பர்ல் 50 ரன்னிலும், எர்வின் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக எர்வின் -ஜாய்லார்ட் கும்பி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.

    முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே அணி 112 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜாய்லார்ட் கும்பி 26, எர்வின் 47, வெஸ்லி மாதேவேரே 2, சீன் வில்லியம்ஸ் 23 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - ரியான் பர்ல் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் அடித்தனர். 50 ரன் எடுத்த நிலையில் ரியான் பர்ல் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 5, ராசா 68 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • நேபால் அணி கேப்டன் ரோகித் அதிகபட்சமாக 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று நேபால் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் நேபால் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர். ஆசிப் ஷேக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பீம் ஷர்கி - குஷால் புர்டெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    நேபால் அணி 66 ரன் எடுத்த போது 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. குஷால் புர்டெல் 27 ரன்னிலும் அடுத்து வந்த ஆரிப் ஷேக் 6 ரன்னிலும் பீம் ஷர்கி 22 ரன்னிலும் அவுட் ஆகினர். சிறிது நேரம் தாக்குபிடித்த கேப்டன் ரோகித் 33 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்ததால் நேபால் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
    • யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

    ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் சிறப்பாக ஆடிய ரிச்சி பாரிங்டன் சதம் அடித்தார். அவர் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    யு.ஏ.இ. சார்பில் ஜுனைட் சித்திக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ., ஸ்கட்லாந்து அணியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் ஷெரீப் 4 விக்கெட் , கிறிஸ் சோல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஓமன் தரப்பில் அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார்.
    • இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஓமன் அணி 20 ரன்கள் எடுப்பதற்க்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜதீந்தர் சிங் - அயன் கான் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை ஹசரங்கா பிரித்தார். ஜதீந்தர் சிங் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    ×