search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சதம் விளாசிய பூரன்- நெதர்லாந்து அணிக்கு 375 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    சதம் விளாசிய பூரன்- நெதர்லாந்து அணிக்கு 375 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது.
    • நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஜிம்பாப்வேயில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங்- சார்லஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்து வீச்சை சுழபமாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது.

    சார்லஸ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமர் ப்ரூக்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே கிங் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹோப் - பூரன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது. ஹோப் 47 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஷெப்பர்ட் 0 ரன்னிலும் ஹோல்டர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 65 பந்துகளில் 104 ரன்னிலும் கீமோ பால் 25 பந்துகளில் 46 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×