search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதுணை"

    • அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்
    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    திடல் ஊராட்சிக்குட்பட்ட, திடல் கிராமத்தில் ஜல்ஜீவன் மிசன் 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி யுடன் கூடிய பைப்லைன் நீட்டித்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்ப டும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகி மகிழ்ச்சி அடைகிறார்கள். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பைப் லைன் நீட்டிப்பு பணிகள் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணிகளை அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். பணிகள் தரமானதாகவும், மக்களின் குறைபாடுகளுக்கு ஆளாகாமலும் பணிகளில் ஆர்வம் காட்டி நிறைவேற்றிட வேண்டும். மக்களின் நியாயமான, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்று வதில் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடந்து முடிந்த நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினரான தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சதாசிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தனது ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை இணைக்கும் இணைப்பு விழா கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை அதன் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான சதாசிவக்குமார் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அம்பே த்கரின் படிப்பகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்திற்கு முன்னதாக திருமாவளவனின் வயதை குறிக்கும் வகையில் 60 அடி உயர கொடிக்கம்பத்தினை நட்டு திருமாவளவனை வைத்து கொடியேற்ற முடிவு செய்து கொடிக்கம்பத்தினை நிறுவ முயற்சி செய்தபோது கொடிக்கம்பம் நடுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி நகராட்சி ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    ×