search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்ஜீவன் திட்டம்"

    • அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்
    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    திடல் ஊராட்சிக்குட்பட்ட, திடல் கிராமத்தில் ஜல்ஜீவன் மிசன் 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி யுடன் கூடிய பைப்லைன் நீட்டித்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்ப டும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகி மகிழ்ச்சி அடைகிறார்கள். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பைப் லைன் நீட்டிப்பு பணிகள் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணிகளை அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். பணிகள் தரமானதாகவும், மக்களின் குறைபாடுகளுக்கு ஆளாகாமலும் பணிகளில் ஆர்வம் காட்டி நிறைவேற்றிட வேண்டும். மக்களின் நியாயமான, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்று வதில் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • கலெக்டர் தகவல்
    • 7 ஒன்றியங்களில் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2020 21-ஆம் ஆண்டு திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 79 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்-12. ஆற்காடு-13. காவேரிப்பாக்கம் -4. நெமிலி-18, சோளிங்கர்-11. திமிரி-12 மற்றும் வாலாஜா-9) தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.600 மற்றும் பொது பிரிவு குடியிருப்புகுக் கிராமங்களுக்கு ரூ.1200 தொகையும் செலுத்தப் படவேண்டும்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இதுநாள் வரையில் தங்களது பொதுமக்கள் பங்குத்தொகையினை செலுத்தாதவர்கள் அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் உள்ள ஊராட்சிகணக்கு ஜல் ஜீவன் கணக்கில் செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் 2022-23-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 5 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்- 17 பணிகள்) தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தங்களுக்கான பொதுமக்கள் பங்குத் தொகையினை உரியகணக்கில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளவும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ×