search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வுடன் இணக்கமாக இருக்க வேண்டும் - திருமாவளவன் பேச்சு
    X

    தி.மு.க.வுடன் இணக்கமாக இருக்க வேண்டும் - திருமாவளவன் பேச்சு

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடந்து முடிந்த நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினரான தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சதாசிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தனது ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை இணைக்கும் இணைப்பு விழா கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத்தை அதன் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான சதாசிவக்குமார் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அம்பே த்கரின் படிப்பகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்திற்கு முன்னதாக திருமாவளவனின் வயதை குறிக்கும் வகையில் 60 அடி உயர கொடிக்கம்பத்தினை நட்டு திருமாவளவனை வைத்து கொடியேற்ற முடிவு செய்து கொடிக்கம்பத்தினை நிறுவ முயற்சி செய்தபோது கொடிக்கம்பம் நடுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி நகராட்சி ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் இணக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×