search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்பு"

    • சேலம் மாவட்டத்தில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகு திக்கு உட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்க ளில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களின் ஓட்டுச்சாவடிக்குட்பட்ட வீடு தோறும் சென்று வாக்காளர்களிடம் படிவம் 6-பி ஐ வழங்கி அவர்களின் சுய விருப்பத்தின்படி பூர்த்தி செய்து, அந்த படிவத்தை திரும்ப பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    அதன்படி கெங்கவல்லி தொகுதியில் 9,282, ஆத்தூர் 8,524, ஏற்காடு 13,617, ஓமலூர் 16,825, மேட்டூர் 13,576, எடப்பாடி 15,172, சங்ககிரி 12,189, சேலம் மேற்கு 14,821, சேலம் வடக்கு 9,622, சேலம் தெற்கு 9,952, வீரபாண்டி 13,499 என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 79 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விருப்பம் தெரிவித்து, படிவத்தை பூர்த்தி செய்து, வழங்கி உள்ளனர்.

    அதில் அதிகபட்சமாக ஓமலூர் தொகுதி மக்கள், அதிகம் பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். 2-வது இடத்தில் எடப்பாடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 4-ந்தேதி நடந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

    எனவே சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது.
    • இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூ ராட்சியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-.யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ள படிவம் 6 பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்க அலுவலர்களிடமும், அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    பொத்தனூர் பேரூ ராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.
    • வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது.

    திருப்பூர் :

    அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாட்டிற்காக, இ - ஷ்ராம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறை செயல்படுத்துகிறது.வருமான வரி செலுத்தாத, பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்களிப்பு இல்லாத ஊழியர்கள், தொழிலாளர்களை இத்தளத்தில் பதிவு செய்வதே இதன் நோக்கம்.அந்தந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரை அடிப்படையில், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட துப்புரவு, தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், விவசாயம், கட்டுமானம், கைத்தறி, தச்சு, சிற்பம், கட்டட தொழிலாளி, பெயின்டர் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.

    ஆங்காங்கே உள்ள பொது சேவை மையங்கள் மூலமும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலமும் இ-ஷ்ராம் தளத்தில், பயனாளிகள் இணைக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சில சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சாலையோர வியாபாரிகளை திட்டத்தில் இணைப்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஏற்கனவே, சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக, பிரதான சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமானோர் சாலையோர கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து கூட நேரிடுகிறது.இவர்களை இ-ஷ்ராம் தளத்தில் இணைப்பதா, அப்படி இணைத்தால் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போனதாக சர்ச்சை எழுமே என்ற குழப்பம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பலர் மத்திய அரசின் சலுகைகளை பெறும் நோக்கில், தவறான தகவல் அளித்து போலியாக சாலையோர வியாபாரிகளாக தங்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை மட்டும், இ-ஷ்ராம் திட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது என்றனர்.

    ×