search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இட்லி"

    • விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 250 கிராம்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 300 மில்லி

    சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

    கேரட் - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

    நெய் - ஒரு குழி கரண்டி

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    முந்திரிப் பருப்பு - 15

    பெருங்காயம் - சிட்டிகை

    மஞ்சள் பொடி - சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

    இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.

    • சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
    • மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.

    தேவையான பொருட்கள்

    குட்டி இட்லி - 20

    சமையல் எண்ணெய் - ½ கப்

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி

    கொத்தமல்லி - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி

    கரம் மசாலா - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.

    குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

    2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.

    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
    • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    துருவிய கேரட் - 1/4 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - 1 துண்டு

    உப்பு - தேவையான அளவு

    Eno - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

    மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

    • குழந்தைகளுக்கு இட்லி பிடிக்காது.
    • இட்லியை கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மினி இட்லி - பத்து

    வெங்காயம் - ஒன்று

    தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

    தனியா தூள் - கால் டீஸ்பூன்

    கரம் மசாலா - கால் டீஸ்பூன்

    சர்க்கரை - கால் டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    இடித்த பூண்டு - இரண்டு பல்

    எண்ணெய் - தேவையான அளவு

    குடை மிளகாய் - ஒன்று

    கபாப் ஸ்டிக் - இரண்டு

    செய்முறை

    குடைமிளகாய், வெங்காயத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று என்ற வரிசையில் ஒவ்வொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து வேக விடவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான இட்லி கபாப் ரெடி.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.
    • 5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன.

    சாயல்குடி :

    விலைவாசி பெருமளவு உயர்ந்துள்ள நிலையில் குறைந்தவிலையில் உணவு என்பது சாத்தியமற்றமாக மாறி வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    இந்த தோசை கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையை ருசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன. யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என்பதில் போட்டி நிலவுகிறது. ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. சிறிய குடும்பத்திற்கு ரூ.25 போதும். காலை உணவை நிறைவு செய்யலாம்.

    இதேபோன்று கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம், ரூ.5-க்கு சற்று பெரிய அளவில் உள்ள தோசைக்கு சாம்பார் மற்றும் தக்காளி, தேங்காய் என 2 வகை சட்னியுடன் விற்கப்படுகிறது.

    மதுரை, சென்னை, திருச்சி கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ.10-க்கும், ஒரு தோசை ரூ.40-க்கும் மேலாக உணவகங்களில் விற்கும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் குறைந்த விலையில் இட்லி,தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கக் கூடும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும்.
    • இட்லி உப்புமாவை செய்து கொடுங்க மிச்சமின்றி கடாய் காலியாகும்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 7

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
    • இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவா - 1 கப்

    நெய் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    தயிர் - 1/4 கப்

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    தேவையான அளவு - உப்பு

    பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    முந்திரிப் பருப்பு - 10

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

    வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

    20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

    இப்போது சுவையான ரவா இட்லி தயார்.

    • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வெஜிடபிள் இட்லி செய்து கொடுக்கலாம்.
    • காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்

    புளிக்காத இட்லி மாவு - 2 கப்,

    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,

    பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்,

    பீன்ஸ் - 50 கிராம்,

    பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கியது)

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    வேகவைத்து மசித்த பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

    செய்முறை

    புளிக்காத இட்லி மாவில் கேரட், பீன்ஸ், கொத்தமல்லித்தழை, பீட்ரூட், மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்.

    இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து, கரைத்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் வெஜிடபிள் இட்லி ரெடி.

    இந்த இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    குறிப்பு: கீரையைப் பொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.

    • சாம்பார் இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீர்கள்.
    • வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 2 கப்,

    துவரம் பருப்பு - அரை கப்,

    பரங்கிக்காய் - சிறிய துண்டு.

    சின்ன வெங்காயம் - 12,

    தக்காளி - 3,

    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

    பெருங்காயம் - கால் டீஸ்பூன்,

    புளி - சிறிய உருண்டை,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

    நெய் - 2 டீஸ்பூன்.

    வறுத்து பொடிக்க:

    காய்ந்த மிளகாய் - 6,

    தனியா - 1 டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    கொப்பரை - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - 3 டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, துவரம் பருப்பை குழைய வேக வையுங்கள்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.

    புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

    வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.

    வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள்.

    அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

    பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.

    ×