search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Idly"

    • குழந்தைகள் எப்போது வித்தியாசமான ரெசிபிகளை விரும்புவார்கள்.
    • இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 2

    மூவர்ண குடமிளகாய் - தலா 1

    இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தே.அளவு

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    டூத்பிக் - தே.அளவு

    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    குடைமிளகாய், இட்லியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும்.

    அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.

    இனி டூத்பிக்கில் இட்லி, குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்.

    சூப்பரான இட்லி டிக்கா ரெடி.

    • சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
    • மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.

    தேவையான பொருட்கள்

    குட்டி இட்லி - 20

    சமையல் எண்ணெய் - ½ கப்

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி

    கொத்தமல்லி - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி

    கரம் மசாலா - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.

    குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

    2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.

    • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
    • இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவா - 1 கப்

    நெய் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    தயிர் - 1/4 கப்

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    தேவையான அளவு - உப்பு

    பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    முந்திரிப் பருப்பு - 10

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

    வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

    20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

    இப்போது சுவையான ரவா இட்லி தயார்.

    சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இட்லி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Idly
    இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். 



    இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது.  பாபு தூயவன் மற்றும் ஜி.கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.  
    ×