என் மலர்
நீங்கள் தேடியது "மட்டன்"
- சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
- வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - பொறிக்க
மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
கடலை பருப்பு 100 கி
உளுந்தம் பருப்பு - 100 கி
மிளகு - 50 கிராம்
கருப்பு எள்ளூ - 50 கி
சீரகம் - 50 கி
வரமிளகாய் - 50 கி
இட்லி மாவு - 1 கிலோ

செய்முறை:
• முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
• இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
• வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
• ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.
• பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
• பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.
• பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
• இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.
- பாஜக எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
- இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் பதோஹி தொகுதி எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
அப்போது மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி இல்லாததால் கோவமான இளைஞர் ஒருவர் உணவு பரிமாறிய நபரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






