என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆட்டோ டிரைவர் கதிர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கதிர்"
தஞ்சையில் உடல்நலக்குறைவால் இறந்த ஆட்டோ டிரைவரின் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது அனைவரின் மனதையும் உருக்கியது. #SchoolChildrens
தஞ்சாவூர்:
தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அடம் பிடித்தால் சாக்லேட்டை கொடுத்து அன்பாக பேசி அழைத்து செல்வார்.
ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை, கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். குழந்தைகளும் டிரைவர் ‘‘கதிர் அங்கிள்’’ என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாக பழகிவந்தனர்.
இந்தநிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 19-ந் தேதி உடல்நிலை மோசமான நிலையில் திடீரென இறந்துவிட்டார். அவரின் இறுதி காரியத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது கதிர்வேல் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கூட செல்லாமல் பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு ‘‘டிரைவர் அங்கிள்... நாங்க எல்லோரும் வந்திருக்கோம். கண் திறந்து பாருங்க’’ என கதறியது மனதை உருக்குவதாக இருந்தது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தியபடியிருந்த அவரின் உடலை பார்த்து எங்களை இனிமேல் நீங்க ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துபோக வரமாட்டிங்களா என கேட்டதும் கதிர்வேலின் குடும்பம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டனர். எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்து கிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்வி குறியாக இருக்கு என்று அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.
தங்களை பாதுகாப்பாக பாசத்துடன் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #SchoolChildrens
தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கதிர்வேல் எப்போதும் எல்லோருடனும் அன்பாக பழகக்கூடியவர். ஆட்டோவில் வரும் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகள் போலவே கவனித்து கொள்வார். காலை நேரத்தில் எப்போதும் கைகளில் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அடம் பிடித்தால் சாக்லேட்டை கொடுத்து அன்பாக பேசி அழைத்து செல்வார்.
ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் பெற்றோரிடம் உங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லை, கவனிச்சு பாருங்க என கூறிவிட்டுதான் செல்வார். இதனால் குழந்தைகள் தொடங்கி அவர்களின் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். குழந்தைகளும் டிரைவர் ‘‘கதிர் அங்கிள்’’ என எப்போதும் பாசத்துடன் அழைத்து அன்பாக பழகிவந்தனர்.
இந்தநிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 19-ந் தேதி உடல்நிலை மோசமான நிலையில் திடீரென இறந்துவிட்டார். அவரின் இறுதி காரியத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது கதிர்வேல் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கூட செல்லாமல் பள்ளி சீருடையிலேயே அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீர் விட்டு ‘‘டிரைவர் அங்கிள்... நாங்க எல்லோரும் வந்திருக்கோம். கண் திறந்து பாருங்க’’ என கதறியது மனதை உருக்குவதாக இருந்தது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் கிடத்தியபடியிருந்த அவரின் உடலை பார்த்து எங்களை இனிமேல் நீங்க ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துபோக வரமாட்டிங்களா என கேட்டதும் கதிர்வேலின் குடும்பம் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டனர். எல்லா பிள்ளைகளையும் நல்லா பார்த்து கிட்டவரோட இரண்டு பிள்ளைகளின் எதிர்கால நிலைமைதான் இனி பெரிய கேள்வி குறியாக இருக்கு என்று அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர்.
தங்களை பாதுகாப்பாக பாசத்துடன் அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் உடலை பார்த்து பள்ளி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #SchoolChildrens
பாரதிய ஜனதாவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று விசாரித்தார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
சென்னை:
சமீபத்தில் ஜாபர்கான்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் பெட்ரோல் விலை உயர்வது குறித்து குரல் எழுப்பினார்.
வேகமாக மேடைக்கு சென்ற அவர், தமிழிசை சவுந்தரராஜன் அருகில் நெருங்க முயன்றார். அவரை பா.ஜனதா தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து ஆட்டோ டிரைவரை பா.ஜனதாவினர் தாக்கியதாக தகவல் பரவியது.
கதிரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழிசை கூறியதாவது:-
மேடையில் தாக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து கேட்டேன். தான் ஒரு ஆட்டோ டிரைவராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேட்டதாகவும், மது குடித்து இருந்ததால் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். யாரும் அடிக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என்றார்.
சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண்டன சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
சமீபத்தில் ஜாபர்கான்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் பெட்ரோல் விலை உயர்வது குறித்து குரல் எழுப்பினார்.
வேகமாக மேடைக்கு சென்ற அவர், தமிழிசை சவுந்தரராஜன் அருகில் நெருங்க முயன்றார். அவரை பா.ஜனதா தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து ஆட்டோ டிரைவரை பா.ஜனதாவினர் தாக்கியதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், தமிழசை சவுந்தரராஜன் ஜாபர்கான் பேட்டையில் உள்ள ஆறுமுகம் தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் கதிர்வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்றார். தொண்டர்கள் யாரும் தாக்கினார்களா? என்பதை கேட்டு அறிந்தார்.
மேடையில் தாக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து கேட்டேன். தான் ஒரு ஆட்டோ டிரைவராக இருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேட்டதாகவும், மது குடித்து இருந்ததால் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். யாரும் அடிக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என்றார்.
சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண்டன சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #PetrolPriceHike
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X