search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருப்புக்கோட்டை பேராசிரியை"

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமி காவல் ஜூன் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மாணவிகளை பாலியல் விவகாரத்தில் அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் முருகன், கருப்பசாமி ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 11-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi
    மாணவிகளுக்கு பாலியல் வரை விரித்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ந் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் (எண்2) உத்தரவிட்டுள்ளது.

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன்  வழங்க எதிப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    முன்னதாக கருப்பசாமியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #AruppukottaiProfessor #NirmalaDevi
    நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


    துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

    அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

    அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
    ×