search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசோனா"

    • குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் படகை இயக்கினார்
    • 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக தொடர்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியானார். மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் நடந்தது.

    அந்த ஏரியில் ஒரு படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பொழுதுபோக்கிற்காக சென்றனர். ஏரிப்பகுதியில் அந்த படகு நிறுத்தப்பட்டது. அவர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி விளையாடி கொண்டிருந்தார்.

    படகின் பின்புறம் தனது குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் அந்த படகை இயக்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக படகு இயக்கக்கூடிய இயந்திரத்தின் இறக்கையில் சிக்கி சிறுமியின் கால் துண்டானது.

    நீந்தி கொண்டிருந்த அச்சிறுமியின் தந்தை படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து வேகமாக அருகே வந்தார். அது தங்கள் மகள் என இருவரும் தெரிந்து கொண்டவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்தனர்.

    பிறகு அருகில் இருந்தவர்களின் படகில் அச்சிறுமியை ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.

    ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அச்சிறுமியை கொண்டு சென்றனர்.

    அச்சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறியிருப்பதாவது:-

    இது விபத்துதான். இருந்தாலும் நாங்கள் விசாரித்து வருகிறோம். படகில் இருந்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை.

    இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.

    அமெரிக்காவின் அரிசோனா செனட் சபை உறுப்பினரும் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளருமான ஜான் மெக்கெய்ன் உடல்நலக்குறைவால் காலமானார். #JohnMcCain #US
    நியூயார்க்:

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரிசோனா மாநிலத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தவர் ஜான் மெக்கெய்ன் (வயது 81). அமெரிக்க கடற்படை அதிகாரியாக இருந்த இவர் வியட்னாம் போரில் கைது செய்யப்பட்டு வடக்கு வியட்னாமில் போர் கைதியாக சிறையில் இருந்தவர்.  

    இதனால் போர் நாயகனாக அறியப்படும் ஜான், கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர்.  இந்த தேர்தலில் பராக் ஒபாமாவிடம் அவர் தோல்வி கண்டார்.

    கிளையோபிளாஸ்டோமா எனப்படும் மூளை புற்றுநோயால் இவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  இதற்காக அவர் தொடர்ந்து ஒரு வருடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    இந்நிலையில் ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்து உள்ளார்.  இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அலுவலக தகவலில், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் 2018ம் ஆண்டு ஆகஸ்டு 25ந்தேதி மாலை 4.28 மணியளவில் காலமானார்.

    அமெரிக்காவுக்காக மரணம் அடையும்வரை அவர் 60 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×