search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republican"

    • போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
    • குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

    இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு
    • குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ரான் டிசாண்டிங், கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் டிரம்ப் தனக்கான ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் உள்ளார்.

    அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. மாகாண வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதமும், கிறிஸ் கிறிஸ்டி 2 சதவீதமும் ஆதரவு உள்ளது. 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

    டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர் ஆஜராகி வருகிறார். ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு உள்ளது.

    அமெரிக்காவின் அரிசோனா செனட் சபை உறுப்பினரும் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளருமான ஜான் மெக்கெய்ன் உடல்நலக்குறைவால் காலமானார். #JohnMcCain #US
    நியூயார்க்:

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரிசோனா மாநிலத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தவர் ஜான் மெக்கெய்ன் (வயது 81). அமெரிக்க கடற்படை அதிகாரியாக இருந்த இவர் வியட்னாம் போரில் கைது செய்யப்பட்டு வடக்கு வியட்னாமில் போர் கைதியாக சிறையில் இருந்தவர்.  

    இதனால் போர் நாயகனாக அறியப்படும் ஜான், கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர்.  இந்த தேர்தலில் பராக் ஒபாமாவிடம் அவர் தோல்வி கண்டார்.

    கிளையோபிளாஸ்டோமா எனப்படும் மூளை புற்றுநோயால் இவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  இதற்காக அவர் தொடர்ந்து ஒரு வருடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    இந்நிலையில் ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்து உள்ளார்.  இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அலுவலக தகவலில், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் 2018ம் ஆண்டு ஆகஸ்டு 25ந்தேதி மாலை 4.28 மணியளவில் காலமானார்.

    அமெரிக்காவுக்காக மரணம் அடையும்வரை அவர் 60 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×