search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் ஜப்தி"

    • விபத்து வழக்கில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது

    வேடசந்தூர், ஜூன்.8-

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாகாநத்தம் கிராமம் தோப்பூரைச் சேர்ந்த காளியப்பன், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை சர்மிளா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியதில் 9 மாத குழந்தை சர்மிளா சம்பவ இடத்திலேயே பலியானது.

    மேலும் பழனியம்மாளின் ஒரு கை முறிந்து பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காளியப்பன் தொடர்ந்த வழக்கில் வேடசந்தூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019ஆம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் இழப்பீடு வழங்காததால் வேடசந்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வேடசந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசுப் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் விபத்தில் காயம் அடைந்த மாணவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மரியசூசைநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் கடந்த 25.9.2014 அன்று அரசு பஸ்சில் சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த பஸ் ஆம்பூர் அய்யனார்மேம்பாலம் அருகே சென்ற போது, ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியில் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் பிரேம்குமார் பலத்த காயமடைந்தார். இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.

    இது பற்றி ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் நஷ்டஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.43 லட்சத்து 22 ஆயிரத்து 949 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.

    மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.65 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பிரேம்குமார் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அரசு போக்குவரத்து கழகம் பிரேம்குமாருக்கு நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று கடலூரில் இருந்து வேலூர் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
    ×