என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் மாணவர் காயம் - நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
Byமாலை மலர்7 Aug 2018 9:30 AM GMT (Updated: 7 Aug 2018 9:30 AM GMT)
கடலூர் மாவட்டத்தில் விபத்தில் காயம் அடைந்த மாணவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் மரியசூசைநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் கடந்த 25.9.2014 அன்று அரசு பஸ்சில் சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் ஆம்பூர் அய்யனார்மேம்பாலம் அருகே சென்ற போது, ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியில் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் பிரேம்குமார் பலத்த காயமடைந்தார். இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இது பற்றி ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் நஷ்டஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.43 லட்சத்து 22 ஆயிரத்து 949 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.65 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பிரேம்குமார் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அரசு போக்குவரத்து கழகம் பிரேம்குமாருக்கு நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று கடலூரில் இருந்து வேலூர் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர் புதுப்பாளையம் மரியசூசைநகரை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் கடந்த 25.9.2014 அன்று அரசு பஸ்சில் சென்னை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் ஆம்பூர் அய்யனார்மேம்பாலம் அருகே சென்ற போது, ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியில் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் பிரேம்குமார் பலத்த காயமடைந்தார். இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இது பற்றி ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் நஷ்டஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.43 லட்சத்து 22 ஆயிரத்து 949 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.
மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.65 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பிரேம்குமார் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, அரசு போக்குவரத்து கழகம் பிரேம்குமாருக்கு நஷ்டஈடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று கடலூரில் இருந்து வேலூர் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X