என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seized government bus"
- விபத்து வழக்கில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
- இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது
வேடசந்தூர், ஜூன்.8-
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாகாநத்தம் கிராமம் தோப்பூரைச் சேர்ந்த காளியப்பன், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை சர்மிளா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியதில் 9 மாத குழந்தை சர்மிளா சம்பவ இடத்திலேயே பலியானது.
மேலும் பழனியம்மாளின் ஒரு கை முறிந்து பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காளியப்பன் தொடர்ந்த வழக்கில் வேடசந்தூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019ஆம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு வழங்காததால் வேடசந்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வேடசந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசுப் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்