search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் ஜப்தி"

    • விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
    • நஷ்டஈடு வழங்க தாமதமானதால் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    வேடசந்தூர்:

    திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன்(35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் அருகில் உள்ள தோப்பூருக்கு வந்தார். அங்கு அவரை இறக்கிவிட்டு மீண்டும் தனது பைக்கில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கோட்டைமந்தயம் அருகே இவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் இவர்மீது மோதியது. இதில் ஒரு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். தனக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3லட்சத்து 60ஆயிரத்து 754 வழங்கவேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.

    ஆனால் இந்த தொகையை வழங்காமல் போக்குவரத்து கழகம் தாமதம் செய்து வந்தது. இதனைதொடர்ந்து தமிழ்ச்செல்வன் மீண்டும் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் ஜப்தி செய்யப்பட்டது. கோர்ட்டு அமீனா பஸ்சில் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டுவந்தார். இதனால் பஸ்நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
    • இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் அகல்யா (வயது 18). இவர் 2014 செப்டம்பர் 18-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.கோம்பை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். கன்னிமார்புரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பஸ்சில் இருந்து திடீரென அகல்யா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் படிப்பை தொடர முடியாமல் போனது.

    இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் அகல்யா தனக்கு இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேடசந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்தத் தொகையை போக்குவரத்து கழகத்தினர் செலுத்த தவறியதால் சார்பு நீதிபதி சரவணகுமார் பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்று இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் செல்லச்சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • 2-வது முறையாக நடவடிக்கை
    • செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் சுபா ஷினி (வயது 13). இவர் செய் யாறில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் 27.8.2014 அன்று பள் ளிக்குச் செல்வதற்காக கிரா மத்தில் உள்ள பஸ் நிறுத்தத் தில் அரசு பஸ்சில் ஏற முயன் றார். அப்போது பஸ்சில் சிக்கி சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விபத்தில் இறந்த சுபாஷி னிக்கு நஷ்டஈடு தொகை வழங்கக் கோரி அவரது பெற்றோர் சார்பில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி விபத் தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.8 லட்சத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப் புரம் மண்டலம் வழங்க வேண்டும் என்று கடந்த 16.10.2019 அன்று உத்தரவிட்டார்.

    2 வருடங்களுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்காததால் சுபாஷினியின் பெற்றோர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன். நஷ்டஈடு தொகையை அச லும், வட்டியுமாக சேர்த்து ரூ.14.35 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண் டும் என்றும். தவறினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 29.8.2022 அன்று உத்தரவிட்டு இருந் தார்.

    அந்த உத்தரவின் பேரில் 2.9.2022 செய்யாறிலிருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    உடனே போக்குவரத்து கழகம் சார்பில் விபத்தில் இறந்த மாணவியின் பெற்றோரிடம் நீதிமன்றம் உத்தரவிட்ட நஷ்டஈடு தொகையில் ரூ.13.64 லட்சத்தை செலுத்தி விட்டு பஸ்சை மீட்டுச் சென்றனர்.

    மீதி தொகையான ரூ.72 ஆயிரத்தை மனுதாரருக்கு போக்குவரத்துக் கழகம் வழங்காத காரணத்தால், 2-வது முறையாக செய்யாறு பஸ் நிலையத்தில் சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை நீதி மன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • செய்யாறில் விபத்தில் பெண் பலி
    • பஸ் கோர்ட்டில் ஒப்படைப்பு

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி, வனஜா, கூலித் தொழிலாளி இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்று விட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தார்.

    ஞான முருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்க ளுக்கு விபத்துக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மனு தாரர்கள் தரப்பில் சார்பு நீதி மன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறை வேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.

    அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ. மனுதாரர் குடும்பத்திற்கு அரசுபோக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.

    ஆனால் போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் நேற்று மதியம் செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து சேலம் செல்லஇருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • விபத்தில் சிக்கியவருக்கு நிவாரணம் வழங்காததால் நடவடிக்கை
    • கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    ஆரணி:

    கலசபாக்கம் அடுத்த அணியாலை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 27) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பஸ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து சம்பத் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பத் என்பவருக்கு ரூ.7லட்சத்து 54ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் ஆரணி நீதிமன்ற நீதிபதி தாவூத் அமால் உத்தரவு பிறப்பித்தார்.

    இதன் மேல்முறையீடு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு 7லட்சத்து 54ஆயிரத்து 239 ரூபாய் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கபட்டது.

    நிவாரண தொகையை இதுவரையில் வழங்காத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலையில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் 202 தடம் எண் கொண்ட அரசு பஸ்சை நீதிமன்ற அலுவலர் துரை தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    • விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் நடவடிக்கை
    • பஸ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லூர்துசாமி இழப்பீடு கேட்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார வர்மன் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட லூர்துசாமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 30 வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவின்படி லூர்துசாமிக்கு இழப்பீடு தொகை வழங்காததால், செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை சார்பு நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • பஸ் மரத்தில் மோதி விவசாயி பலியான வழக்கில் நடவடிக்கை
    • குடியாத்தம் பஸ் நிலையத்தில் பரபரப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி ஜங்காலபள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 52) விவசாயி.

    கடந்த 2015-ஆம் ஆண்டு மணி அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமம் அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான மணியின் மகன்கள் அசோக்குமார், வேலு, மகள்கள் சத்யா, பவித்திரா ஆகிய 4 பேரும் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரணை செய்த குடியாத்தம் சார்பு நீதிபதி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணியின் வாரிசுதாரர்களுக்கு 11 லட்சத்து 82ஆயிரத்து 342 ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

    அரசு போக்குவரத்து நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன் இழப்பீட்டு தொகையை வசூலிக்கும் பொருட்டு குடியாத்தம் அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

    நேற்று காலையில் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளையாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.தேவராஜ், பி.ஆனந்தராஜ், மணியின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் டவுன் பஸ்சை பயணிகளுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி ஜப்தி செய்தனர்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழக்கறிஞர் மூலம் சார்பு நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர் விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    அதனை ஏற்றுக் கொண்ட சார்பு நீதிபதி ஜி. பிரபாகரன் வரும் 8-ந் தேதிக்குள் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு டவுன் பஸ்சை விடுவித்தார்.

    குடியாத்தத்தில் பயணிகளுடன் டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சிவக்குமார் (வயது 33). இவர் ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.12.2018 அன்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 16.9.2020 அன்று சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, விபத்தில் இறந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 706 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு முல்லை அரும்பு என்ற மனைவியும், ஒரு மகள், 3 மகன்களும் உண்டு. ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கீழ் செருவாய் கிராமத்தில் தங்கியிருந்து, கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு அவரது மூத்த மகன் அருண்குமார் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி அவன் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றான். அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்ததில் பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அருண்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

    இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அருண்குமார் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்தை நஷ்டஈடாக அருண்குமார் குடும்பத்தினருக்கு வழங்க விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் நஷ்டஈடு தொகை அதிகமாக உள்ளதாக கூறி அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தற்போது வட்டியுடன் ரூ.18 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் அந்த நஷ்டஈடு தொகையையும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் மதுரையில் இருந்து பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள், அந்த பஸ்சை ஜப்தி செய்தனர். 

    • அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மனைவி கலை வாணி ( வயது 37 ). இவர் புதுச்சத்திரம் அருகே தீர்த்தனகிரி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் செவி லியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8.11.2015 அன்று வேலை முடிந்து தீர்த்தனகிரியில் இருந்து மேட்டுப்பா ளையம் மெயின்ரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் . அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் சென்ற மோட் டார் சைக்கிள் மீது மோதியது . இதில் நிலைதடுமாறி சாலை யில் விழுந்த அவர் மீது அரசு பஸ் ஏறி இறங்கியதில் கலை வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் நஷ்டஈடு கேட்டு மோகன், அவரது மகன்கள் கடலூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன் , சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ .53 லட்சத்து 98 ஆயிரத்து 400 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது . ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து ரூ .82 லட்சம் வழங்கக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த தொகையும் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது . அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் பஸ்சை ஜப்தி செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுைர அருகே உள்ள சீலப்பாடியான்களத்ைத சேர்ந்தவர் வீராச்சாமி.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் அரசு பஸ்மோதி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து அவரது மனைவி ஜோதியம்மாள் நஷ்டஈடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஜோதியம்மாளுக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனைதொடர்ந்து மீண்டும் ஜோதியம்மாள் மேல்முறையீடு செய்தார். இதனைதொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேடசந்தூர் நீதிபதி சரவணக்குமார் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து வேடசந்தூரில் இருந்து பழனிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் வெள்ளைச்சாமி , வக்கீல் அபிமன்யு மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து வேடசந்தூர் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.

    • பஸ் மோதி உயிரிழந்தார்
    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதியது.

    கோவை:

    கோவை தடாகம் சாலையில் வசித்து வருபவர் கண்ணன்(வயது65). இவரது மனைவி கோமதி(65). இவர்களது மகன் கார்த்திகேயன்(41).

    இவர் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 2009 மார்ச் 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர் திசையில் வந்த அரசு பஸ் கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து நடந்த போது தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் மாதம் ரூ.15 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்தார்.

    மகன் உயிரிழந்து விட்டதால் உரிய இழப்பீடு வழங்க கோரி கார்த்திகேயனின் பெற்றோர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திகேயனின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.12.63 லட்சத்தை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து கணக்கிட்டு 7.50 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2021 செப்டம்பர் 21-ந் தேதி உத்தரவிட்டது.

    இருப்பினும் உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்காததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்று மனுவை கடந்த ஜனவரி மாதம் கார்த்திகேயனின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜப்தி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து காந்திபுரம்-சிவானந்தா காலனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.

    ×