ஆரணியில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் சிக்கியவருக்கு நிவாரணம் வழங்காததால் நடவடிக்கை கோர்ட்டில் ஒப்படைத்தனர்
ஆரணியில் அரசு பஸ் ஜப்தி
Published on

ஆரணி:

கலசபாக்கம் அடுத்த அணியாலை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 27) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பஸ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சம்பத் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பத் என்பவருக்கு ரூ.7லட்சத்து 54ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் ஆரணி நீதிமன்ற நீதிபதி தாவூத் அமால் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மேல்முறையீடு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு 7லட்சத்து 54ஆயிரத்து 239 ரூபாய் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கபட்டது.

நிவாரண தொகையை இதுவரையில் வழங்காத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலையில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் 202 தடம் எண் கொண்ட அரசு பஸ்சை நீதிமன்ற அலுவலர் துரை தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com