search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் அரசு பஸ் ஜப்தி
    X

    செய்யாறில் அரசு பஸ் ஜப்தி

    • விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் நடவடிக்கை
    • பஸ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லூர்துசாமி இழப்பீடு கேட்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார வர்மன் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட லூர்துசாமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 30 வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவின்படி லூர்துசாமிக்கு இழப்பீடு தொகை வழங்காததால், செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை சார்பு நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×