search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கலை அறிவியல் கல்லூரி"

    • இனஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு காலி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
    • பஸ், ரெயில்களில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

    இக்கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு ஆன் லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு 2 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    நேற்று வரை மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 36,626 மாணவர்களும், 48,275 மாணவிகளும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரையில் சேர்த்துள்ளனர்.

    ஒரு சில கல்லூரிகளில் இன்னும் சில முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் நேரடி மாணவர் சேர்க்கை 7-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இனஒதுக்கீடு அடிப் படையில் மாணவர்களுக்கு காலி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

    இதற்கிடையில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு தொடங்குவதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்திலேயே கல்லூரி தொடங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வருட மாக தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் பழையப் படி கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் உயர் கல்வியை தொடரப்போகும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் மாநில கல்லூரி, நந்தனம், வியாசர்பாடி, ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரிகள், பச்சையப்பா, லயோலா, சென்னை கிறிஸ்தவ கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரி, எத்திராஜ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, வைஷ்ணவ கல்லூரி, அண்ணா ஆதர்ஸ், பாரதி, ராணிமேரி மகளிர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன.

    காலை வகுப்புகள் தவிர மாலை நேர வகுப்புகளும் நடைபெறுவதால் பஸ், ரெயில்களில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
    • அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையில் முதற்கட்டமாகவும், கடந்த 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

    இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த கலந்தாய்வு குறித்த அட்டவணையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதி (இன்று) முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று உயர்கல்வித் துறை அந்த தேதியை மாற்றம் செய்து, புதிய தேதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 30-ந்தேதி வரை இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.
    • மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் மொத்தம் உள்ளன. இதற்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 29-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த வருடமும் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

    நேற்று வரை 72 ஆயிரம் பேருக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. இன்று 3 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. 2 கட்ட கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 30 ஆயிரம் காலி இடங்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பினாலும் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன. மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் சில கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதனால் 3-வது கட்ட கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) இடங்கள் காலியாக உள்ள அரசு கல்லூரிகளில் நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று இடங்கள் கிடைக்காத மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இன ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் மற்றும் இதர காலி இடங்கள் அனைத்தையும் நிரப்ப அரசு கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கல்லூரி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அனைத்து இடங்களை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கேட்டால் 20 சதவீதம் அதிகரித்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என்றனர்.

    அனைத்து கலை அறிவியில் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    • மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.
    • இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.

    இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 10-ந்தேதி வரையும் 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ந்தேதி வரையும் நடைபெறும்.

    தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.

    கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.
    • தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானவுடன் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    வழக்கம்போல பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கும், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும் விண்ணப்பித்தனர்.

    பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பி.காம். (பொது), பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது. அரசு கலை கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் முன்கூட்டியே நல்ல பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்து வருகிறார்கள்.

    164 அரசு கலை கல்லூரிகளில் சேர கடந்த 8-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு கலைகல்லூரிகளை நோக்கி வருகிறார்கள்.

    பி.காம். உள்ளிட்ட குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இறுதி நாளாக இருப்பதால் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை நாடினர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.

    நேற்று வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 780 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இன்று இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்ப தால் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என்று உயர் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    விண்ணப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என தனியார் நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர். நந்தகுமார் தெரிவித்துள்ளார். ஏழை பெற்றோர் இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முக்கிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.

    அதனை பெறுவதற்கு தாமதம் ஆவதால் குழந்தைகளை சேர்க்க கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

    ×