search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ராணுவ மந்திரி"

    அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பென்டகனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டது. #NirmalaSitharaman
    வாஷிங்டன்

    மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் சென்றுள்ள இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அவர் வாஷிங்டனில் உள்ள தலைமையகத்தில் உள்ள புத்தகத்தில் சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜார்ஜ்புஷ்சுக்கு இரங்கல் குறிப்பு எழுதினார். பின்னர் ஆர்லிங்டனில் உள்ள தேசிய கல்லறையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பென்டகனில் அவர் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கலிபோர்னியாவில் உள்ள ராணுவ கண்டுபிடிப்புகளுக்கான தொழிற்சாலையையும், ஹவாயில் உள்ள இந்தோ-பசிபிக் கமாண்ட் தலைமையகத்தையும் பார்வையிட்டார்.



    இரு தலைவர்கள் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க மந்திரி மேட்டிஸ், “அமெரிக்க-இந்திய ராணுவ உறவு உடையக்கூடிய அல்லது வெற்று வார்த்தைகளால் வரையறுக்கப்பட்டதல்ல. ஆனால் தியாகங்களை மதிப்பது, அமைதிக்கான நடவடிக்கை, நட்புறவு மற்றும் சுதந்திரம் ஆகியவைகளில் மனி தாபிமான அடிப்படையில் இருநாட்டு அங்கீகாரத்துடன் மூழ்கிய நட்புறவால் வரையறுக்கப்பட்டது.

    இன்றைய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையேயான இணக்கமான தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் நாங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளதால் அமெரிக்காவின் நவீன போர் தளவாடங்களை இந்தியா பெறும்.

    இவ்வாறு மேட்டிஸ் கூறினார்.

    மேட்டிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, “ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ரக ஏவுகணைகள் வாங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் வருங்காலத்தில் நாங்கள் பேசி தீர்ப்போம்” என்றார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    இதற்கு முன்பு டெல்லி, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உண்மையிலேயே நேர்மறையானது, பாதுகாப்பானது. இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை, ராணுவ கூட்டு நடவடிக்கையில் உறுதித்தன்மை ஆகியவை வளர்ந்துவருகிறது. பல வருடங்களாக இந்திய- அமெரிக்க ராணுவ உறவில் ஒரு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை ஒரு முக்கிய ராணுவ பங்குதாரராக இந்தியா பார்க்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயும் நல்ல ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள், அறிவியல் இணக்கம், கூட்டு உற்பத்தி, கூட்டு வளர்ச்சி உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மிகவும் வலிமை பெற்று வருகிறது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக வாஷிங்டன் வந்துள்ளார். அமெரிக்க ராணுவ மந்திரியுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்தடைந்தார்.



    வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.

    அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.

    சமீபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். #NirmalaSitharaman #JamesNMattis #Pentagon
    சிங்கப்பூரில் நடக்கும் ராணுவ மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிசை சந்தித்து பேசியுள்ளார்.
    சிங்கப்பூர் :

    ஆசியான் நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் இடையே பல்வேறு நாடுகளின் ராணுவ மந்திரிகளை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

    அன்படி அவர் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிசை சந்தித்து பேசினார். இதைப்போல மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளின் ராணுவ மந்திரிகளையும் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் ராணுவ மந்திரி நெக் எங் ஹென்னையும் சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளும் பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணி வரும் நிலையில், இந்த சந்திப்பின் போது புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, இருநாட்டு போர்க்கப்பல்களின் பரஸ்பர வருகை உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்புகிறார்.
    அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானில் புதியதாக பதவியேற்ற நேட்டோ படை தளபதியை சந்தித்து பேச சென்றுள்ளார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தலீபான் பயங்கரவாதிகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதற்கான நடவடிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

    இதற்காக கடந்த ஓராண்டாக தலீபான் நிலைகள் மீது வான்தாக்குதல்களை அதிகரிப்பதிலும், ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதிலும் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. எனினும் ஆப்கானிஸ்தானில் இன்னும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமெரிக்காவால் முடியவில்லை.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் நேட்டோ படைக்கு புதிய தளபதியாக அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் டன்போர்டு சமீபத்தில் பதவியேற்றார். அவரை சந்தித்து பேசுவதற்காக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று காபூல் சென்றார். இந்த சந்திப்பின் போது தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.

    முன்னதாக தலீபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டு இருந்த அவர், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் இனியும் கானல் நீராக இருக்காது என கூறியது குறிப்பிடத்தக்கது.
    ×