search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jim Mattis"

    அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகியதையடுத்து பேட்ரிக் சனாகாவை பொறுப்பு ராணுவ மந்திரியாக டிரம்ப் அறிவித்தார். #DonaldTrump #PatrickShanahan
    வாஷிங்டன்:

    உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் அங்கு தாக்குதல் நடத்தி வந்தன.

    இந்த நிலையில், அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், தான் பதவி விலகுவதாக கூறி, டிரம்பிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.



    இந்த நிலையில், துணை ராணுவ மந்திரி பேட்ரிக் சனாகானை பொறுப்பு ராணுவ மந்திரியாக நியமித்து, அவர் ஜனவரி 1-ந் தேதி முதல் பணியை தொடங்குவார் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.

    இது பற்றி டிரம்ப் தனது டுவிட்டரில் “மிக திறமை வாய்ந்த துணை ராணுவ மந்திரியை, ராணுவ மந்திரி (பொறுப்பு) ஆக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.#DonaldTrump #PatrickShanahan
    அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் (வயது 68) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns

    அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானில் புதியதாக பதவியேற்ற நேட்டோ படை தளபதியை சந்தித்து பேச சென்றுள்ளார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 17 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தலீபான் பயங்கரவாதிகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதற்கான நடவடிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

    இதற்காக கடந்த ஓராண்டாக தலீபான் நிலைகள் மீது வான்தாக்குதல்களை அதிகரிப்பதிலும், ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதிலும் அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. எனினும் ஆப்கானிஸ்தானில் இன்னும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமெரிக்காவால் முடியவில்லை.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் நேட்டோ படைக்கு புதிய தளபதியாக அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் டன்போர்டு சமீபத்தில் பதவியேற்றார். அவரை சந்தித்து பேசுவதற்காக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று காபூல் சென்றார். இந்த சந்திப்பின் போது தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.

    முன்னதாக தலீபான்களுடனான பேச்சுவார்த்தை குறித்து கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டு இருந்த அவர், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் இனியும் கானல் நீராக இருக்காது என கூறியது குறிப்பிடத்தக்கது.
    பிரதமர் நரேந்திர மோடியின் கடன் அபாயம் குறித்த உரையை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு நடந்த 17-வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர், சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து பெரும் சுமையை ஏற்றி வைப்பதாக விமர்சித்தார். அதற்கு பதிலாக, அந்த நாடுகளை வளர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், பிரதமரின் இந்த உரையை தற்போது வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடன் பெறுவதன் அபாயம் குறித்து பிரதமர் மோடி மிகவும் நல்ல கருத்தை எடுத்துரைத்தார். இது மிகவும் உண்மை. அத்துடன் புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் வழிவகுத்து இருக்கிறது’ என்றார்.

    மோடியின் உரையை கேட்டுவிட்டு அறைக்கு சென்ற பின் இரவில் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததாக கூறிய ஜேம்ஸ் மேட்டிஸ், இதுபோன்ற கடன்களால் உங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இழந்துவிடுவீர்கள் என்றும் கூறினார். அந்த உரைக்காக இந்தியாவை (மோடி) நினைவு கூருகிறேன் என்றும், அது மூத்த ஒருவரின் உரையை கேட்பதைப்போல இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 
    ×