search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்குபஞ்சர்"

    • ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூந்துறை நேமம் கரக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஷமீரா பீவி(வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந்தேதி அவரது கணவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

    இதில் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷமீரா பீவியை அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு வீட்டில் பிரசவம் பார்க்க அவரது கணவரான நயாஸ்(47) மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தது ஷிஹாபுதீன் என்ற அக்குபஞ்சர் மருத்துவர் என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

    • விருதுநகர் அருகே அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது.
    • பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் இலவச அக்குபஞ்சர் மற்றும் டெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் குருசுப்ரமணியன், குருபாக்கியம், ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். காளிமுத்து, பசுபதி ராமநாதன் வாழ்த்தி பேசினார்கள். உலக தமிழ்ச் சங்க தலைவர் நிலவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தராஜ், சுந்தர்ராஜ், லட்சுமணகுமார், கதிர்வேல், சித்தா மருத்துவ உதவியாளர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மதுரை இயற்கை அக்குபஞ்சர் மருத்துவர் ஜெயக்குமார் ஜெயலட்சுமி, லிங்கா, தோல் நோய் மருத்துவர் முத்துலட்சுமி, சர்க்கரை நோய் மூட்டு வலி பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் கனகதுர்க்கா லட்சுமி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    • கிங்-ஐ.சி.ஏ.வின் அக்குபஞ்சர் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையத்தில் கிங்-ஐ.சி.ஏ. சார்பில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பு இன்று (24-ந் தேதி) அதன் நிறுவனர் மும்தாஜ் பேகம் தலைமையில் நடந்தது.

    அங்குள்ள ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காலை 10.30 மணி பயிற்சி வகுப்பு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆண்மைக்குறைவு, பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய், சிறுநீரக நோய், தைராய்டு, குழந்தையின்மை, முதுகு வலி, மலசிக்கல், சைனஸ், தூக்கமின்மை, அஜீரன கோளாறுகள் போன்ற கோளாறுகளை குணப்படுத்திக் கொள்ள அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர் முறை கற்றுத்தரப்பட்டது.

    இந்த பயிற்சியை டாக்டர்கள் டேனியல் சதீஷ், சிவகாமி, பரிமளக்கண், ஷேக் இப்ராகிம், பானு பிரியா ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடு களை கிங்-ஐ.சி.ஏ. செயலாளர் ராஜா முகமது, இயக்குநர்கள் கோபிநாத், ஜான்ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது
    • டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் பங்கேற்பு

    திருச்சி:

    திருச்சி கே. கே .நகரில் இயங்கி வரும் கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மையம் சார்பில் உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மைய முதல்வர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் கே .எஸ் .சுப்பையா பாண்டியன், இந்திரா கணேசன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் விவேகானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் டாக்டர்கள் விஜய் கார்த்திக், குமார் முகமதுஷா, தமிழ்ச்செல்வி, சரவணகுமார், லீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு டி.சி.எம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் அக்குபஞ்சர் மருத்துவர்கள் சார்பாக அக்குபஞ்சர் கவுன்சில் தனியாக அமைக்க வேண்டும், தகுதியான அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • உடலின் சக்தி ஓட்டப்பாதையில் சிறு ஊசிகளைக் குத்தி அதன் மூலம் உடம்பின் சக்தி ஓட்டத்தை சமநிலைப்படுத்தப்படுகிறது
    • அக்குபஞ்சர் சிகிச்சையால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை

    கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு எந்தவித மருந்து, மாத்திரை, ஊசி, ஆபரேஷனும் இன்றி அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் ஆர்.லட்சுமி. இந்திய ஆப்டோ அக்குபஞ்சர் ஆராய்ச்சி மைய நிறுவனரான டாக்டர் ஆர்.லட்சுமி, கண் நோய்களுக்கான அக்குபஞ்சர் சிகிச்சை முறைகள் குறித்து அளித்த விளக்கத்தை பார்ப்போம்.

    உலக மக்களின் கண்களை "கண்போல்" காத்து வரும் - ஆசியாவின் முதல் தர கண் மருத்துவமனையாகிய சங்கர நேத்ராலயாவில் - சென்னையில் சில காலம் ஆப்தோமட்டிஸ் (Optometrist) ஆக பணிபுரிந்து, அக்குபஞ்சர் வைத்திய முறையை நன்கு கற்றறிந்து, பின் கண் நோய்களைப் பற்றிய நிறைய ஆராய்ச்சிகளை, எனது Co-Dr.T.S. ஆனந்த், Ph.D. (Eye Acu)வுடன் சேர்ந்து Glaucoma, Retinitis Pigmentosa, Optic atropy, Diabetic Retinopathy, Dry eyes, Nystagmus, Squint, Macular degeneration, Retinal Deteachment, VI Nerve Palsy, Double Vision, Ptosis, Corneal disorders Retinal disorders ஆகிய நோய்களுக்கு அக்குபஞ்சர் தெரபி மூலம் Indian Opto Acupuncture Research Center, Ayanavaram, Chennai-23ல் குணமளித்திருக்கின்றோம்.

    "அக்குபஞ்சர்" என்றால் உடலின் சக்தி ஓட்டப்பாதையில் சிறு ஊசிகளைக் குத்தி அதன் மூலம் உடம்பின் சக்தி ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதாகும். அக்குபஞ்சர் வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அக்குபுள்ளிகளில் நோய்களின் தன்மைக்கேற்ப Syuok Needle-களை (0.17mm dia x 0.7mm Length) கண்களைச் சுற்றி (கண்களில் அல்ல) மற்றும் உடலில் உள்ள அக்குபுள்ளிகளிலும் குத்தி வைத்தியம் செய்வதே "கண் அக்குபஞ்சர் தெரபி" ஆகும்.

    இந்த சிறு ஊசிகளை நமது உடலில் குத்தும்போது வலி தெரிவதில்லை. காயங்கள் ஏற்படுவதில்லை. இரத்தம் வருவதில்லை. Rare வீக்கம் ஏற்படுவதில்லை புண் அல்லது கொப்புளங்கள் ஏற்படுவதில்லை, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நோயாளி வேறு எந்தவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு எந்த மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், வேறு எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும், ஊசிகளையும் கொடுக்காமல் அக்குபஞ்சர் ஊசிகளை மட்டும் "அக்குபுள்ளிகளில்" செலுத்தி கண் நோய்களை சரிசெய்து வருகின்றோம்.

    I) RETINITIS PIGMENTOSA:


    Retinitis Pigmentosa, Macular Degeneration, Corneal dystrophies மற்றும் பல நோய்கள் மரபணு குறைபாடுகளால் ஏற்படுகின்றது. இதில் முதன்மையானது மாலைக் கண்நோய் (Retinitis Pigmentosa), இந்தியாவில் 100-க்கு ஒருவர் இதை சுமந்து கொண்டும் இருக்கிறார்கள்.

    மரபணுவினால் ஒன்றுக்கும் மேற்படி கண் நோய்கள் கோர்வையாகி ஏற்படுவது மாலைக்கண்நோய் ஆகும். இந்நோய் உள்ளவருக்கு மாலையில் மட்டும் கண் பார்வை இருக்காது என்ற கூற்று பொய்யானது. மேலும் வெளிச்சம் குறைவான இடங்களிலும் கண் பார்வை இருக்காது.

    இந்த நோய் உடல் சார்ந்த மரபுக்கடத்தல் எனும் கருவிழியை பாதிக்கும் 60 வகையான GENE மூலமாக வேறுபடுவதால் நோயின் தன்மை, வீரியம், வேகம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகின்றது.

    பார்வை குறைபாட்டை குழந்தை பிறந்தவுடன் அல்லது வளர்ச்சியின் நடுவில் கண்டுபிடித்தால் எந்த மரபணு குறைபாட்டால் வந்தது என்பதை Genetic testing மூலம் அறிந்துகொள்ளலாம்.

    இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் நோயின் தன்மைக்கேற்ப Sujok Needle-களை கண்களைச் சுற்றி மற்றும் உடலில் உள்ள அக்குபுள்ளிகளிலும் குத்தி தொடர் வைத்தியம் செய்வதன் மூலம் நோயை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

    II) DIABETIC RETINOPATHY:


    டையபட்டிக் ரெட்டினோபதி எனப்படுவது சர்க்கரை வியாதியினால் கண் விழித்திரையில் இருக்கம் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு உண்டாகி பார்வை குறைபாடு ஏற்படுகின்றது. கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு, வண்ணங்களை பிரிப்பதில் சிக்கல், மங்கலான பார்வை போன்ற குறைபாடுகள் இருக்கும். குறித்த நேரத்தில் சர்க்கரை நோய்க்கு சரியான மருத்துவம் எடுக்காவிட்டால் முழு பார்வையும் போய்விடும். சர்க்கரை நோயினால் இந்தியாவில் கேட்ராக்ட், குளுக்கோமா, மேக்குலர் டிஜெனரேசன், டையபட்டிக் ரெட்டினோபதி போன்ற கண் நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றது. மாற்று மருத்துவ முறையில் தொடர் அக்குபஞ்சர் மருத்துவம் மூலமாக மேற்கண்ட நோயை கட்டுப்படுத்தி இழந்த பார்வையை மீட்டெடுத்து இருக்கின்றோம்.

    III) MACULAR GEGENARATION:



    மேக்குலர் டி ஜெனரேசன் ரெட்டினாவுக்கு கீழ் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதால் கண்களின் மையப் பகுதியில் பார்வை இழப்பு ஏற்படும். பரம்பரை வியாதி, சுற்றுப்புறச் சூழலினால் பாதிப்பு, புகைபிடித்தல், உடல் பருமன், உணவுமுறை ஆகிய காரணங்களால் இந்த நோய் ஏற்படலாம்.

    ஆரம்ப நிலையில் நாம் பார்க்கும் நேர்கோடு கோணலாகத் தெரியும் அல்லது சிறிது சிறிதாகவோ அல்லது திடீரென்றோ பார்க்கம் பார்வையில் வித்தியாசம் தெரியும். சரியான நேரத்தில் எங்களிடம் கண் அக்குபஞ்சர் செய்து கொண்டவர்கள் இந்த குறைபாட்டை சரிசெய்து இழந்த பார்வையை பெற்றிருக்கின்றார்கள்.

    IV) SIXTH NERVE PALSY:


    சிக்ஸ்த் நர்வ் பேல்சி பக்கவாதம், சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நரம்புத்தளர்ச்சி, மூளையின் தமனி அன்யூரிஸம், முகத்தில் அல்லது தலையில் அடிபடுதல், தொற்று, வீக்கம், கட்டிகள், தொடர் ஒற்றைத்தலைவலி, அகச்சிதைவு அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக மூளை நரம்பு பழுதடைந்திருக்கும் அல்லது சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாக இரட்டை பார்வை, கருடப்பார்வை, மங்கலான பார்வை இருக்கும். நாலாபுறமும் கருவிழி சுழல்வது தடைபடும். கண் அக்குபஞ்சர் தெரபி செய்து இந்த நோயை குணப்படுத்திவிடலாம்.

    V) SQUINT:



    ஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளில் பார்ப்பதாகத் தோன்றும். பரம்பரை, கண்களின் தசைகள் வலிமை குறைவதாலும் கண்ணின் நரம்புகள் பாதிப்பதாலும், மேலும் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம்.

    ஆரம்பத்தில் பார்வை குறைபாடு, இரட்டை பார்வை ஏற்படும். அதிகப்படியாக இந்த நோய் குழந்தைகளையே பாதிக்கும். இந்த குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் தொடர் அக்குபஞ்சர் சிகிச்சை மற்றும் செய்வதன் மூலம் முற்றிலுமாக குணமாக்கி இருக்கின்றோம்.

    VI) GLAUCOMA:


    கண் அழுத்த நோயானது பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு ஏற்படுகின்றது. கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலும், வேறு பல காரணங்களினாலும் இந்நோய் உருவாகிறது. பழைய நிலைக்குத் திரும்ப கொண்டு செல்ல முடியாத ஒரு தீவிர கண்நோய் ஆகும்.

    அதிகரித்த உள்விழி அழுத்தம் கண் அழுத்த நோய் வருவதற்கான ஒரு முக்கிய ஆபத்து காரணமாகும். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தை ஏற்படுத்தக் கூடும். இதன் விளைவாக, பார்வைத்திறன் இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான பார்வையின்மை உருவாகிறது.

    "பதுங்கும் பார்வைத் திருடன்" என அழைக்கப்படும் இந்த பார்வை இழப்பானது ஒரு நீண்ட கால அளவில் ஏற்படுகின்றது. நோய் மிகவும் முற்றிய பின்னரே இது கவனிக்கப்படுகிறது. ஒருமுறை பார்வை இழப்பு நேர்ந்து விட்டால் பிறகு பார்வை திறனை திரும்பப் பெறவே முடியாது. உலகெங்கும் பார்வையின்மைக்கான இரண்டாவது காரணமாக கண் அழுத்த நோய் உள்ளது. ஆரமபக் கட்டத்திலேயே இந்த நோயை கண்டறிந்துவிட்டால், பிறகு அது மேலும் முன்னேறிச் செல்வதை தடுக்க இயலும்.

    உடல் உஷ்ணம், குளிர்ந்த நீரில் குளிப்பது, காற்றோட்டமான இடத்தில் வசிப்பது, குளிர்ச்சியான உணவு வகைகளை உண்பது, குறைந்தது 8 மணி நேரம் தூக்கம், அதிக வேலைப்பளு இல்லாத வாழ்க்கை, கவலை அல்லது அச்சம் காரணமாக ஏற்படும் பதற்றம், ஓய்வின்மை, இருக்கமான மனநிலை, தனிமை, பசி, பிணி, அதிகமான மாத்திரை மருந்துகள் ஆகிய காரணிகள் ஒருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு முழு முதல் காரணமாகிறது. நாட்கள் செல்லச் சல்ல பக்கவாட்டில் பார்வை குறைபாடு ஏற்பட்டு (Field Vision) பக்கவாட்டில் மறைய ஆரம்பித்து பின்பு ஒரு ஓட்டை (Tunnel) வழியாக பார்வை இருக்கும். பலருக்கு கண்கள் கூசுதல், நடு பார்வையில் ஒரு வெள்ளைப்படலம் தோன்றுதல், நடப்பது வண்டி ஓட்டுவதில் சிரமமும் ஏற்படலாம். சிலருக்கு முழுவதுமாக பார்வை பறிபோய்விடும். இந்நோய்க்கு அக்குபஞ்சர் மருத்துவ முறைப்படி (கண் அக்குபஞ்சர் தெரபி மூலம்) சரிசெய்து விடலாம்.

    VII) UVEITIS:


    யூவெயிட்டிஸ் என்பது கண்களின் மத்தியில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம், கட்டிகள் ஆகும். ஒரு கண்ணிலோ அல்ல இரண்டு கண்களிலோ பாதிப்பு ஏற்படலாம்.

    இவை முன்புறம், இடைநிலை, பின்புறம் ஆகிய மூன்று அடுக்குகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். இது திடீரென்று ஏற்பட்டு குறுகிய காலமோ அல்லது நீண்ட நாட்களுக்கோ இருக்கும்.

    குறைந்த பார்வை திறன், இடங்கள் இருண்டதாகவும், மிதப்பது போன்றும் தோற்றமளிக்கும் காட்சி, மங்கலான அல்லது புரை விழுந்த பார்வை, ஒளி அல்லது போட்டோபோபியா உணர்திறன், கருவிழியின் நிறம் மாறுதல், கண்களில் நீர் வடிதம், கண்கள் வலி மிகுதியுடன் சிவந்து இருத்தல், இந்நோய்க்கு மருந்து, மாத்திரைகள் இல்லாமம் அக்குபஞ்சர் தெரபி மூலம் தொடர் சிகிச்சை செய்து நோயை குணப்படுத்தி இருக்கின்றோம்.

    VIII) DRY EYES:


    கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து ஈரப்பதத்துடன் இருப்பதால்தான் இமைகளின் உராய்வை தடுக்கின்றது. மேலும் கண்களுக்கு புத்துணர்வை அளிக்கின்றது. போதிய நீர்மை தன்மை இல்லாததால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.

    வறண்ட கண்களில் நீர் வழிந்துகொண்டே இருக்கும். காற்றுப் பட்டால் எரியும், இதனால் கார்னியாவில் பாதிப்புகள் ஏற்படும். தொடர்ந்து புத்தகம் கடிப்பது டி.வி. பார்க்கும்போது, மொபைல் பார்க்கும் போது கண்களை இமைக்காமல் பார்ப்பதனால் போதுமான திரவம் கண்களில் சுரப்பது நின்றுபோகும். இதனால் கண்களும் வறண்டு போகும்.

    மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் வறட்சி ஏற்படுகின்றது. கண்கள் வறண்டு போவதால் தொற்று ஏற்படும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் பிரச்சனைஏற்படும். தொடர்ந்து அக்குபஞ்சர் தெரப்பி எடுததுக் கொள்வதன் மூலமாக நிரந்தரமாக இந்த நோயை குணப்படுத்தி விடலாம்.

    IX) OPTIC ATROPY:


    அட்ராபி என்றால் வீணாக்குதல் அல்லது சீரழிதல் என்று பொருள். பார்வை நரம்பினை பாதிக்கும் ஒரு நிலை. இது ஒரு சிறிய நோய் அல்ல. மிகவும் தீவிரமான ஒரு நிலையின் அறிகுறியாகும். பல்வேறு பாதிப்புகளால் நரம்புகள் சேதமடைவதால் பார்வைச் சிதைவு ஏற்பட்டு பார்வையில் குருடடுத் தன்மையை ஏற்படுத்தும்.

    பார்வை நரம்பு மூளைக்கு தூண்டுதல்களை கடத்தும் நரம்பு இழைகளால் ஆனது. இந்த தூண்டுதல்களைக் கடத்தும் பார்வை நரம்பின் திறனில் ஏதோ குறுக்கீடுகள் ஏற்படும்போது கண்களில் குளுக்கோமா, பார்வை நரம்பின் பக்கவாதம், பார்வை நரம்பை அழுத்தும் கட்டி, பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படும். முதலில் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டு இரண்டாவது கண்ணிலும் பார்வை இழப்பு ஏற்படும்.

    மங்கலான பார்வை, பக்க பார்வையில் சிரமங்கள், வண்ணங்களை பிரித்து அறிய இயலாமை, பார்வையின் கூர்மை குறைதல் ஆப்டிக் அட்ரோபியின் அறிகுறிகளாகும். தொடர் அக்குபஞ்சர் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த கண் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்திருக்கின்றார்கள்.

    X) PTOSIS:


    இமைவாதம் தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேல் இமை கீழ்நோக்கித் தொங்குதல். இந்நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்நோய் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். கண்களில் நீர் வழிதல், அதிகமாக மேல் இமை கீழ்நோக்கி தொங்குவதால் பார்ப்பதற்கு சிரமம் ஏற்படும். இது தசையின் வலிமை குறைவதாலும், Nerves பலவீனப்படுவதாலும் சர்க்கரை நோயினாலும், வயது முதுமையினாலும் ஏற்படலாம். தொடர் அக்குபஞ்சர் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த கண் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்திருக்கின்றார்கள்.

    கண் நோய்கள் வருவதிலிருந்து எளிதில் தப்பிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கீழ்க்கண்ட வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    1. சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் - இன்றிமையாதது.

    2. வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். (கண்களுக்கும் சேர்த்து)

    3. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து நீர்ச்சத்து, நார்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை உண்ண வேண்டும்.

    4. தூசி மற்றும மாசு நிறைந்த இடங்களில் பணி செய்யும்போது அதற்கான பாதுகாப்பான கவச உடைகளை அணிய வேண்டும்.

    5. இரவில் 9 மணிக்கு தூங்கிவிட வேண்டும்.

    6. அதிகமான மாத்திரை மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

    7. மது, சிகரெட் மற்றும் போதை பொருக்ளை உபயோகிக்கக்கூடாது.

    8. டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் Cell Phone ஒளிக்கதிர்களை அதிக நேரம் பார்க்க கூடாது.

    9. மிகவும் நெருங்கிய உறவு முறைகளுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

    10. காலையிலும், இரவிலும் நல்ல சுத்தமான குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது சிறந்தது. உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் நல்லது.

    11. தொடர்ந்து AC Room உள்ளேயே இருப்பது, பணிபுரிவது, தூங்குவது கூடவே கூடாது.

    12. கண் நோய்களை ஆரம்ப நிலைகளிலேயே கண் மருத்துவர்களிடம் காண்பித்து குணமாக்கிக் கொள்ள வேண்டும்.

    சுருங்கக்கூறின் நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைதான் (Life Style) நமது அனைத்து கண் நோய்களுக்கு அடிப்படை காரணமாகின்றது. இவைகளை நமது பாரம்பரிய வைத்திய முறையாக அக்குபஞ்சர் முறை மூலமாக எந்தச் சூழ்நிலையிலும் அனைத்து கண் நோய்களை குணமாக்கிவிட முடியும்.

    அக்குபஞ்சர் தெரபி மூலமாக

    1. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பெரு நோயாளிகளும் கூட எந்தவித மருந்து, மாத்திரை, ஊசி, ஆப்ரேஷன் இன்றி குணமடைய முடியும்.

    2. சிகிச்சை காலங்களில் பெரிய அளவில் உணவுக் கட்டுப்பாடு கிடையாது.

    3. சிகிச்சைக்கான செலவும், நேரமும் மிக மிகக் குறைவு.

    4. பார்வை திறன் 1 சதவிகிதம் இருந்தாலும் போதும். இழந்த பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மீட்டுத்தர முடியும். சிகிச்சையினால் பக்க விளைவுகள் கிடையாது.

    5. சிறு சிறு மற்ற வியாதிகளிலிருந்தும் விடுபட்டு விடலாம்.

    6. தூரப்பார்வை, கிட்டப்பார்வை குறைபாடுள்ள சிறியவர்கள், பெரியவர்கள் தொடர்ந்து அக்குபஞ்சர் தெரபி எடுத்துக் கொண்டால் அவர்களது மூக்குக் கண்ணாடியை நிரந்தரமாக கழற்றிவிடலாம்.

    7. சிலவகை கண் நோய்களிலிருந்து ஒரே நாளில் கூட விடுதலை பெற முடியும்.

    8. இதுவரை எந்த நோயாளியும் குணமடைந்தபின் அதே கண்நோய் திருப்பித் தாக்கியதில்லை (No Reverse)

    9. பரம்பரை நோய்களையும் கூட (Genetic Disorder) மிக மிக எளிதில் நிரந்தரமாக குணமாக்கிவிட முடியும்.

    10. மிக நெருங்கிய உறவு முறைக்குள் (Consanguinity Marriage) திருமணம் செய்து கொண்டதால் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ ஏற்பட்ட கண் கறைபாடுகளையும் குணமாக்கி தர முடியும்.

    உலகத்தில் வேறு எந்த மருத்துவத்திலும் இல்லாத இத்தனை சிறப்புகளைக் கொண்ட நமது பாரம்பரிய மருத்துவ முறையான அக்குபஞ்சர் என்ற அருமருந்தைக் கொண்டு கண் நோய்களை குணப்படுத்தலாம்.

    மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க...

    Dr. R.LAKSHMI B.Sc., D.Opt., Ph.D. (Eye Acu)

    Dr. T.S. ANAND M.A. Ph.D. (Eye Acu)

    Indian Opto Acupuncture Research Center

    No.10, 2nd Cross Street, Venkaesapuram Colony,

    (Opp) Tarapore Girl's Hr. Sec. School, Ayanavaram,

    Chennai-600 023

    044-42600505, 97908 10908, 7667273273,

    E-mail: ioarc2016@gmail.com

    Web: www.indianoptoacupuncture.com

    ×