search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக அக்குபஞ்சர் தின விழா
    X

    உலக அக்குபஞ்சர் தின விழா

    • உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது
    • டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் பங்கேற்பு

    திருச்சி:

    திருச்சி கே. கே .நகரில் இயங்கி வரும் கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மையம் சார்பில் உலக அக்குபஞ்சர் தின விழா நடைபெற்றது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கேர் அண்ட் கியூர் அக்குபஞ்சர் மைய முதல்வர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் கே .எஸ் .சுப்பையா பாண்டியன், இந்திரா கணேசன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் விவேகானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் டாக்டர்கள் விஜய் கார்த்திக், குமார் முகமதுஷா, தமிழ்ச்செல்வி, சரவணகுமார், லீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு டி.சி.எம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. விழாவில் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் அக்குபஞ்சர் மருத்துவர்கள் சார்பாக அக்குபஞ்சர் கவுன்சில் தனியாக அமைக்க வேண்டும், தகுதியான அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×