search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ் பேக் வகைகள்"

    • தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
    • மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

    குளிர்ந்த காலநிலையானது அதன் இயற்கையான ஈரப்பதத்தை தோலில் இருந்து அகற்றி, சருமத்தை உலர்ந்ததாகவும் மந்தமானதாகவும் மாற்றும். குளிர்காலத்தின் உறைபனி காற்று, சருமத்தை எளிதில் வறண்டு போக வைக்கின்றன. இருப்பினும், பயப்பட வேண்டாம், சரியான பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தை கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

    உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை வலுப்படுத்தும் அத்தியாவசிய பேஸ் மாஸ்க்குகளை கண்டறிய வேண்டும் மற்றும் குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் பிரகாசமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

     தேன் மற்றும் தயிர் மாஸ்க்

    தேனின் ஈரப்பதமூட்டும் பண்புகளை தயிரின் ஊட்டமளிக்கும் நன்மையுடன் இணைக்க வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன் ஈரப்பதத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

     அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

    அரை அவகேடோ பழத்தை மசித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும், அதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. எனவே இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

     வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய் ரேடியன்ஸ் மாஸ்க்

    ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவ வேண்டும். வாழைப்பழங்கள் வைட்டமின்கள் மற்றும் ஈரப்பதத்துடன் நிரம்பியுள்ளன. மேலும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு கதிரியக்க பிரகாசத்தை சேர்க்கிறது. மந்தமான குளிர்கால சருமத்திற்கு உயிர் சக்தியை மீட்டெடுக்க இந்த மாஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    • பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.
    • தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டது.

    குளிர்காலத்தில் சூழ்ந்திருக்கும் பனியின் ஆதிக்கம் சருமத்தை எளிதில் வறண்டுபோகச் செய்துவிடும். சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அபகரித்து சருமத்தை உலர்வாகவும், மந்தமாகவும் மாற்றிவிடும். ஒரு சில ஃபேஸ் மாஸ்க்குகளை உபயோகித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மிளிரச் செய்யலாம். அத்தகைய ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் பார்வைக்கு...

     வாழைப்பழம் - பாதாம் எண்ணெய்:

    பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்பு கழுவி விடலாம். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களும், ஈரப்பதமும் சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமையும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலையை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த மாஸ்க் சிறந்த தேர்வாக அமையும்.

     தேன் - தயிர் மாஸ்க்:

    தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைச் கொண்டது. தயிர் சருமத்தை மென்மையாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் பொலிவுடன் மிளிரத் தொடங்கும்.

     ஓட்ஸ் - பால்:

    இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். ஓட்ஸ் இறந்த சரும செல்களை நீக்கும். பால் சருமத்தை ஈரப்பதமாக்கும். நன்கு உலர்ந்ததும் சருமத்தை நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாக்குவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

     அவகேடா - ஆலிவ் எண்ணெய்:

    அவகேடா பழத்தை பாதியாக வெட்டி, ஒரு துண்டை மட்டும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை நீரில் கழுவி விடலாம். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், வைட்டமின்களும், ஆலிவ் எண்ணெய்யும் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவும்.

     வெள்ளரி - கற்றாழை:

    ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். வெள்ளரி சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்கும். கற்றாழை சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கும். புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

    • அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும்.
    • மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர முடிகள் வளர்வது தடைபடும்.

    பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்றுத் தரும்.

    * முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவை கூட்டும்.

    * பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

    * நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.

     * பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.

    * ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சீனி கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

    * பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.

    • கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
    • பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது.

    சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம், நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.

    ஆனால், முகத்துக்கு கிரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம். அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம். என்ன செய்யலாம்?

     1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.

    2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

    3. பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

    4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

     5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

    6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    • பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள்.
    • தேன் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்.

    முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்து தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?

    ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக் என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்…

    தேவையான பொருட்கள்

    மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

    காபி தூள்- ஒரு ஸ்பூன்

    தேன் ஒரு ஸ்பூன்

    கடலை மாவு- ஒரு ஸ்பூன்

    பால்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், காபி தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.

    இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தம் செய்துவிட்டு பின்னர் முகத்தில் 10-ல் இருந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

    • அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பம்.
    • சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை நாட்களில் பளிச்சென்ற முகத்தோற்றத்துடன் அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். பண்டிகை நாள் நெருங்கத் தொடங்கியதும்... பலரும் பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பர். அவை பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்படுத்தாதவைகளாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதாகவும், இறந்த செல்களை நீக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    அதேபோல் பண்டிகை நாள் நெருங்கும் வேளையில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை காலங்களில் பெண்களை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக முகப்பரு அமையும். அதனை தவிர்க்க வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ சத்துக்கள் உள்ளடங்கியிருக்கும் மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்ய வேண்டும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதும் சரும அழகை கெடுத்துவிடும். மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளடங்கி இருக்கும் கிரீம்கள் கருவளையங்களை கட்டுப்படுத்தும்.

    கருவளையம் போல், கண்கள் வீங்கும் பிரச்சினையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் பண்டிகை கால ஷாப்பிங், உறவினர்களை கவனிக்கும் முன்னேற்பாடுகள்... என போதிய தூக்கம் இல்லாமல் போகலாம். வைட்டமின் சி அல்லது ஆன்டிஆக்சிடென்ட் கொண்ட கிரீம்கள் வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க துணைபுரியும்.

    சருமத்திற்கு நிரந்தர அழகை கொடுக்கும் தன்மை இயற்கை மூலிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு உண்டு. அவற்றை பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரித்து சரும அழகை பிரகாசிக்க செய்யலாம்.

    • உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது.
    • முகத்திற்கு தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள்.

    நம்முடைய உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் எளிதாக தூசு, மாசுகளால் பாதிக்கப்படுகிறது. சருமத்திற்கு லேசாக நீங்கள் குளிக்க போகும் முன்பு இரண்டு நிமிஷம் தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள். கன்னம், கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் லேசாக அழுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யுங்கள். கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் எல்லா இடங்களிலும் மிருதுவாக ஒரு விரலை வைத்து மசாஜ் செய்யும் பொழுது அல்லது முன்னிருந்து பின்னாக நீவி விடும் பொழுது சருமமானது இலகுவாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சருமம் முதிர்வை சந்திப்பதை காலதாமதம் செய்கிறது. இதனால் இளமையான தோற்றம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.

    அந்த வகையில் நாம் இன்று பலவகையான ஃபேஸ் மாஸ்க்குகளை பற்றி பார்க்கலாம்.

    ஸ்கின் டோன் ஃபேஸ் பேக்

    அரிசிமாவு- 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தயிர்- ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர்- ஒரு மூடி இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் மாதிரி கலந்து அதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வர முகம் கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

    பீட்ருட் ஃபேஸ் மாஸ்க்

    பீட்ருட்டை எடுத்து துருவி அதனை சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பீட்ருட் சாறுடன், 2ஸ்பூன் அரிசிமாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பீட்ருட் மாஸ்க் தயார். இந்த கலவையினை வாரம் இருமுறை இரவில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் முகம், கைகளில் ஏற்படும் கருமை நீங்கவும், முகம் பளபளப்பாகவும், சருமம் பொலிவாகவும் காணப்படும்.

    டீ-டேன் ஃபேஸ் பேக்

    ஒரு கப்பில் கடலைமாவு 3 ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து பேக்காக செய்து இதனை கை, கால்களில் தினமும் தேய்த்து வரலாம். இவ்வாறு பயன்படுத்தி வரும் போது நாம் ஒவ்வொரு நாளும் வெளியின் சென்று வரும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கும், கருமை நிறம், இறந்த செல்களை களைவதற்கும் இந்த பேக் பெரிதும் பயன்படுகிறது.

    குளியல் பொடி

    ஆரஞ்சு பழ தோல்கள் ஒரு கப், கடலைமாவு அரை கப், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், காய்ந்த ரோஜா இதழ்கள் ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த பொடியுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.

    க்ரீன் டீ ஃபேஸ் பேக்

    ஒரு பவிலில் க்ரீன் டீ பேக்கை போட்டு அது மூழ்கும் அளவிற்கு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். 15 நிமிடம் கழித்து டீ பேக்கை எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் கடலைமாவு, காபி தூள் ஒரு ஸ்பூ, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ் போல கலந்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகவும், வலுவலுப்பாகவும் மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற கரும்புள்ளிகள் மறையும்.

    ×