search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Types of Face Packs"

    • பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.
    • தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டது.

    குளிர்காலத்தில் சூழ்ந்திருக்கும் பனியின் ஆதிக்கம் சருமத்தை எளிதில் வறண்டுபோகச் செய்துவிடும். சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அபகரித்து சருமத்தை உலர்வாகவும், மந்தமாகவும் மாற்றிவிடும். ஒரு சில ஃபேஸ் மாஸ்க்குகளை உபயோகித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மிளிரச் செய்யலாம். அத்தகைய ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் பார்வைக்கு...

     வாழைப்பழம் - பாதாம் எண்ணெய்:

    பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்பு கழுவி விடலாம். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களும், ஈரப்பதமும் சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமையும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலையை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த மாஸ்க் சிறந்த தேர்வாக அமையும்.

     தேன் - தயிர் மாஸ்க்:

    தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைச் கொண்டது. தயிர் சருமத்தை மென்மையாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் பொலிவுடன் மிளிரத் தொடங்கும்.

     ஓட்ஸ் - பால்:

    இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். ஓட்ஸ் இறந்த சரும செல்களை நீக்கும். பால் சருமத்தை ஈரப்பதமாக்கும். நன்கு உலர்ந்ததும் சருமத்தை நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாக்குவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

     அவகேடா - ஆலிவ் எண்ணெய்:

    அவகேடா பழத்தை பாதியாக வெட்டி, ஒரு துண்டை மட்டும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை நீரில் கழுவி விடலாம். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், வைட்டமின்களும், ஆலிவ் எண்ணெய்யும் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவும்.

     வெள்ளரி - கற்றாழை:

    ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். வெள்ளரி சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்கும். கற்றாழை சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கும். புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

    • பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள்.
    • தேன் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்.

    முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்து தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?

    ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக் என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்…

    தேவையான பொருட்கள்

    மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

    காபி தூள்- ஒரு ஸ்பூன்

    தேன் ஒரு ஸ்பூன்

    கடலை மாவு- ஒரு ஸ்பூன்

    பால்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், காபி தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.

    இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தம் செய்துவிட்டு பின்னர் முகத்தில் 10-ல் இருந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

    ×