search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face packs"

    • அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பம்.
    • சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை நாட்களில் பளிச்சென்ற முகத்தோற்றத்துடன் அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். பண்டிகை நாள் நெருங்கத் தொடங்கியதும்... பலரும் பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பர். அவை பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்படுத்தாதவைகளாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதாகவும், இறந்த செல்களை நீக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    அதேபோல் பண்டிகை நாள் நெருங்கும் வேளையில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை காலங்களில் பெண்களை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக முகப்பரு அமையும். அதனை தவிர்க்க வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ சத்துக்கள் உள்ளடங்கியிருக்கும் மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்ய வேண்டும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதும் சரும அழகை கெடுத்துவிடும். மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளடங்கி இருக்கும் கிரீம்கள் கருவளையங்களை கட்டுப்படுத்தும்.

    கருவளையம் போல், கண்கள் வீங்கும் பிரச்சினையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் பண்டிகை கால ஷாப்பிங், உறவினர்களை கவனிக்கும் முன்னேற்பாடுகள்... என போதிய தூக்கம் இல்லாமல் போகலாம். வைட்டமின் சி அல்லது ஆன்டிஆக்சிடென்ட் கொண்ட கிரீம்கள் வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க துணைபுரியும்.

    சருமத்திற்கு நிரந்தர அழகை கொடுக்கும் தன்மை இயற்கை மூலிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு உண்டு. அவற்றை பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரித்து சரும அழகை பிரகாசிக்க செய்யலாம்.

    • உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது.
    • முகத்திற்கு தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள்.

    நம்முடைய உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் எளிதாக தூசு, மாசுகளால் பாதிக்கப்படுகிறது. சருமத்திற்கு லேசாக நீங்கள் குளிக்க போகும் முன்பு இரண்டு நிமிஷம் தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள். கன்னம், கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் லேசாக அழுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யுங்கள். கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் எல்லா இடங்களிலும் மிருதுவாக ஒரு விரலை வைத்து மசாஜ் செய்யும் பொழுது அல்லது முன்னிருந்து பின்னாக நீவி விடும் பொழுது சருமமானது இலகுவாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சருமம் முதிர்வை சந்திப்பதை காலதாமதம் செய்கிறது. இதனால் இளமையான தோற்றம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.

    அந்த வகையில் நாம் இன்று பலவகையான ஃபேஸ் மாஸ்க்குகளை பற்றி பார்க்கலாம்.

    ஸ்கின் டோன் ஃபேஸ் பேக்

    அரிசிமாவு- 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தயிர்- ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர்- ஒரு மூடி இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் மாதிரி கலந்து அதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வர முகம் கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

    பீட்ருட் ஃபேஸ் மாஸ்க்

    பீட்ருட்டை எடுத்து துருவி அதனை சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பீட்ருட் சாறுடன், 2ஸ்பூன் அரிசிமாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பீட்ருட் மாஸ்க் தயார். இந்த கலவையினை வாரம் இருமுறை இரவில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் முகம், கைகளில் ஏற்படும் கருமை நீங்கவும், முகம் பளபளப்பாகவும், சருமம் பொலிவாகவும் காணப்படும்.

    டீ-டேன் ஃபேஸ் பேக்

    ஒரு கப்பில் கடலைமாவு 3 ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து பேக்காக செய்து இதனை கை, கால்களில் தினமும் தேய்த்து வரலாம். இவ்வாறு பயன்படுத்தி வரும் போது நாம் ஒவ்வொரு நாளும் வெளியின் சென்று வரும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கும், கருமை நிறம், இறந்த செல்களை களைவதற்கும் இந்த பேக் பெரிதும் பயன்படுகிறது.

    குளியல் பொடி

    ஆரஞ்சு பழ தோல்கள் ஒரு கப், கடலைமாவு அரை கப், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், காய்ந்த ரோஜா இதழ்கள் ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த பொடியுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.

    க்ரீன் டீ ஃபேஸ் பேக்

    ஒரு பவிலில் க்ரீன் டீ பேக்கை போட்டு அது மூழ்கும் அளவிற்கு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். 15 நிமிடம் கழித்து டீ பேக்கை எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் கடலைமாவு, காபி தூள் ஒரு ஸ்பூ, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ் போல கலந்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகவும், வலுவலுப்பாகவும் மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற கரும்புள்ளிகள் மறையும்.

    ×