search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth sickle cut"

    களக்காடு அருகே காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியா (வயது20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வங்கி தேர்வுக்காக நெல்லையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். குமார் இறந்து விட்டார்.

    இதனால் பிரியா அவரது தாய் மாலதி பராமரிப்பில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் மகன் இசக்கிமுத்து (21), கூலித்தொழிலாளி. இவர் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இவரது காதலை பிரியா ஏற்க மறுத்தார். கடந்த ஜனவரி மாதம் இசக்கி முத்து காதலிக்க மறுத்த பிரியாவை சரமாரியாக தாக்கினார்.

    இது தொடர்பாக ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இசக்கிமுத்து தலைமறைவானார். பின்னர் அவர் சென்னையில் ஒரு பிளக்ஸ் போர்டு கம்பெனியில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் தசரா திருவிழாவிற்காக இசக்கிமுத்து ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர் சென்னை செல்ல வில்லை.

    இந்த நிலையில் பிரியாவை மீண்டும் தன்னை காதலிக்குமாறு இசக்கிமுத்து வலியுறுத்தினார். தொடர்ந்து இசக்கி முத்துவின் காதலை பிரியா ஏற்க மறுத்தார். இதனால் இசக்கிமுத்து ஆத்திரமடைந்தார். இன்று அதிகாலை பிரியாவின் தாய் மாலதி பால் கறப்பதற்காக வெளியில் சென்றார். பிரியா வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது இசக்கி முத்து அரிவாளுடன் பிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதை பார்த்த பிரியாவின் தம்பி இசக்கி (17) தடுத்தார். இதில் இசக்கிக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. பிரியா, இசக்கி ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் அலறினார்கள். உடனே இசக்கி முத்து அங்கிருந்து ஓடி விட்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு பிரியாவையும், இசக்கியையும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் களக்காடு, ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    குடும்பத் தகராறில் வாலிபரை வெட்டிய தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர், ஜூன்.13-

    மதுரை மாவட்டம், பேரையூர் கிருஷ்ணகோனார் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). இவரது தங்கையின் கணவர் புண்ணியமூர்த்தி. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார்.

    இது குறித்து மாரியப்பன் புண்ணியமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புண்ணியமூர்த்தி, அவரது மனைவியின் சகோதரர் மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.

    ×