search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு வெட்டு: தங்கை கணவர் கைது
    X

    மதுரை அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு வெட்டு: தங்கை கணவர் கைது

    குடும்பத் தகராறில் வாலிபரை வெட்டிய தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர், ஜூன்.13-

    மதுரை மாவட்டம், பேரையூர் கிருஷ்ணகோனார் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). இவரது தங்கையின் கணவர் புண்ணியமூர்த்தி. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார்.

    இது குறித்து மாரியப்பன் புண்ணியமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புண்ணியமூர்த்தி, அவரது மனைவியின் சகோதரர் மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.

    Next Story
    ×