search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murdered"

    திருவண்ணாமலை அருகே வாலிபர் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அத்திமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் பாபு (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள அவரது சித்தி இந்திரா (35) என்பவர் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவருக்கும், பாபுவிற்கும் அந்த பகுதியில் தனித்தனியாக இடம் உள்ளது. இவர்களது இடத்தின் அருகில் ஆறு உள்ளது.

    இந்த ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அத்திமூர் பகுதியில் பாபுவிற்கும், செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து செல்வராஜ், அவரது மனைவி குள்ளம்மாள் (55). இவர்களது மகன்கள் சரவணன் (35), ஏழுமலை (33), பழனி (31) ஆகியோர் சேர்ந்து பாபுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், குள்ளம்மாள், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், சரவணன், ஏழுமலை, பழனி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், குள்ளம்மாளிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

    தூத்துக்குடி வாலிபர் கொலையில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணி யார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவர் குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கும் சங்கரின் மகன் பாரதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதி, சங்கர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை வாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    அண்ணாநகரில் வாலிபர் கொலையில் கைதான 6 பேரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    அரும்பாக்கம், அசோக் நகரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 21). நேற்று காலை அவர் அண்ணாநகர் 3-வது அவெனியூவில் உள்ள அமைந்தகரை போலீஸ் நிலையம் அருகே மோட் டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் இறந்தார்.

    சம்பவ இடத்தில் ஒருவரை போலீஸ் மடக்கி பிடித்தனர். அவர் அரும்பாக்கத்தை சேர்ந்த சந்தீப்குமார் என்பது தெரிந்தது. ஆதித்யனுடன் ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    அவர் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான அமைந்தகரை என்.எஸ்.கே. நகரை சேர்ந்த சபரிநாதன், முருகன், சுருளி என்கிற சிலம்பரசன், அரவிந்தன், ராஜா, கார்த்தி ஆகிய 6 பேரை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    தேனாம்பேட்டையில் திருமண வரவேற்பு பேனர் வைத்தது தொடர்பான தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டதில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இவரது நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணம் தொடர்பாக மதனும், அவரது மற்றொரு நண்பர் தீபக்கும் சேர்ந்து சத்தியமூர்த்தி நகரில் திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். பேனர் வைத்ததற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.

    நேற்று பகலில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மதனையும், தீபக்கையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மதனும், தீபக்கும் கலந்துகொண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மதனை சிலர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். தடுக்க முயன்ற தீபக் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன் பரிதாபமாக இறந்தார். தீபக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு கொலை நடந்த சத்தியமூர்த்திநகர் பகுதிக்கு சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட மதனின் ஆதரவாளர்கள் திரண்டு எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் புகுந்து தாக்க முற்பட்டனர்.

    உடனே போலீசார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்கள். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தேனாம்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில்  6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×